Wednesday 3 August 2016

(ஆசிரியர் பக்கம்) கடவுள் இல்லவே இல்லை என்று கூறும் ஒரு கூட்டம், கடவுளா அப்படின்னா? என்று கேள்வி கேட்கும் ஒரு கூட்டம், கடவுள் அது நான் தான் என்று ஏமாற்றும் மற்றொரு கூட்டம், இப்படிப்பட்ட கூட்டங்களின் மத்தியில், கடவுள் நல்லவர், அவர் தாம் நம்மை படைத்தவர், அவர்தான் அனைத்திற்கும் மேலான சக்தி, எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார் என்று நான் கூறினால் மட்டும் இந்த உலகம் நம்பிவிடவாபோகிறது? வாசககர்களை ஒரு நொடியில் நம்ப செய்வதற்கோ அல்லது மனம் மாற்றவோ அல்ல, மாறாக நாம் வாழும் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும,; இடத்திலும,; இறைபிரச்சனத்தை நாம் உணரவும், நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே இதோ இந்த இதழ் இறையருளையும், ஆற்றலையும் தாங்கி உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தவழ வருகிறது. அரசியல்வாதிகள், அதிகாரம் படைத்தவர்களின் ஏமாற்று மேடைபேச்சுகளை நம்பும் மனிதர்கள், இவர்களை விட மேலான சக்தி ஒன்று உள்ளது என்று கூறினால் நிச்சயம் எனக்கு எதிர்ப்பு உண்டு. காரணம் அக்கிரம பேச்சுகளையும் ஆபாச பேச்சுகளையும் கேட்டு பழகிபோனவர்களுக்கு ஆன்மீக பேச்சு சற்று கசப்பை உண்டாகத்தான் செய்யும். ஆளும் வளரனும் அறிவு வளரனும் என்று கூறுவார்கள். இவ்வாறு கூறுவதால் தான் என்னவோ உடல் வளர்ச்சியும், ஆன்மீக வளர்;ச்சியும் அடையும் மனிதன், ஆன்மீக வளர்ச்சியில் மட்டும் பின்தங்கி விடுகிறான். நாளடவில் ஆன்மீக வளர்ச்சி முற்றிலும் குன்றி கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். பிறகு நாம் என்னதான் எங்கும் கடவுள் எதிலும் கடவுள் என்று இறைபிரச்சன்னத்தை கூறினாலும் செவிசாய்பதற்கு ஆட்கள் இல்லை. எப்பொழுது மனிதன் தான் பயணிக்கும் உலக பாதையிலிருந்து சற்று மாறுபட்டு ஆன்மீக பாதையில் கவனம் செலுத்தி முழுவளர்ச்சி பெறுகிறானோ அப்பொழுது தான் இறைபிரச்சனம் எங்கும், எதிலும் உள்ளது என்பதை உணர்ந்துகொள்வான். இதை உணரும் தருணத்தில் அவன் மற்ற மனிதர்களைபோல் அல்லாமல் தனித்து காணபடுவான். சாதாரண மனிதனாக வாழ்ந்த இயேசுவும் இவ்வாறு தான் யூதர்களால் தனித்து காணப்பட்டார் காரணம் அவர் தந்தையின் பிரச்சனத்தை முற்றிலும் உணர்ந்து அதைபிறருக்கும் உணர்த்தினார். இதை உணர்ந்தவர்கள் இன்றும் உண்மைகிறித்தவர்களாக வளம் வந்து கொண்டுருக்கிறார்கள். சலேசிய சபையின் தந்தை புனித ஜான்போஸ்கோ தனது மாணவர்களுக்கு அடிக்கடி கூறும் வார்த்தை ‘கடவுள் உன்னை பார்க்கிறார்’. இதை அவருடைய மாணவர்களுக்கு மட்டும் அல்ல மனிதர்களாகிய நம் அனைவருக்கும் தான். இதன் பொருள்தான் என்ன? கடவுள் உன்னை பார்க்கிறார் என்றால் நாம் செல்லும் இடமெல்லாம் கடவுள் வாச செய்கிறார், நம்மை பார்த்து கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம். இதை உணர்ந்தாலே நம் வாழ்வு மேம்படும். இதை உணர்ந்து இறைபிரசன்னததை அறிந்து இறைவனோடு இணைந்திட முயற்சிகள் செய்வோம். இறைவனை உள்ளத்தில் தாங்கிய இதயங்களாய் வளம் வருவோம். விசுவசிக்கிறவனுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை விசுவசிக்காதவனுக்கு எந்த விளக்கமும் பயனில்லை. ராபர்ட் (முகப்புக் கட்டுரைகள்) எங்கும் கடவுள் எதிலும் கடவுள் எங்கும் கடவுள் எதிலும் கடவுள். தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் போன்ற வாக்கியங்கள் கடவுள் பிரசன்னத்தை நிருபிக்கின்றன. ஆனாலும் உண்மையில் கடவுள் இருக்கிறாரா? எந்த உருவில், வடிவில் உள்ளார்? எங்கு உள்ளார்? என்ற கேள்விகள் கடவுளை நம்புவோரிடத்தும் சில நேரங்களில் உள்மனதில் உதிக்கும். கடவுளைப்பற்றியும் அவரின் உண்மைப் பிரசன்னத்தைப் பற்றியும் மனதில் எழும் கேள்விகள் தவறல்ல. அது நம்மை இன்னும் அதிகமாக கடவுளை விசுவசிக்க அழைத்துச்செல்ல வேண்டும். கேள்விக்கான பதில் சரியானதாக இருக்க வேண்டும். உலகில் பிறந்து வாழும் ஒவ்வொரு உயிரினமும் தன்னை விட ஒரு உயரிய சக்தி இருப்பதை நம்புகின்றனர். ‘அந்த சக்திக்குக் கீழ்தான் நாம் எல்லோரும்’ என்ற எண்ணமும் உண்டு. இந்த சக்திக்கு பல்வேறு உருவங்களையும், குணநலன்களையும், தெய்வீகத் தன்மையும் கொடுத்து கடவுளாகப் பார்க்கும் சூழல் பல வரலாற்றையும் தாண்டி நிற்கிறது. அதே வேளை அந்தச் சக்தியைக் கடவுள் என்று பார்க்க மறுக்கும் நாத்திகத்தனமும் இவ்வுலகில் உண்டு. அந்த சக்தி அன்பு நிறைந்தவராக, மன்னிப்பவராக, காப்பவராக, தீமையை அழிப்பவராக, உதவி செய்பவராக, நல்வழிபடுத்துபவராக என இன்னும் எத்தனை எத்தனையோ குணநலன்களைக் கொடுத்து உயரிய இடத்தில் கடவுளாக வைத்துள்ளோம். கடவுள் இவ்வுலகைச் சார்ந்தவரில்லை, வேறு ஒரு உலகை சார்ந்தவர். அவர் நம்மை விட மிகப் பெரியவர். நாம் அவரிடம் செல்வது கடினம் என தவறானக் கொள்கைகளும் பரப்பப்பட்டு, மூடநம்பிக்கையில் பொய்கடவுள்களை உருவாக்கி பிழைப்பு நடத்தும் கூட்டமும் பெருகி வருகிறது. கடவுளை விற்பனைப் பொருளாக்கி இலாபம் ஈட்டும் கூட்டம் தினமொரு திட்டம் தீட்டி செயல்படுகிறது. இதற்கு மாறானக் கருத்தை இறையியல் அறிஞர் கார்ல்ரானர் முன்வைக்கிறார். கடவுள் என்பவர் வேறு உலகை சார்ந்து அவரின் படைப்பை விட்டு பிரிந்து இருப்பவர் அல்ல. என்னாளும் நம்மோடு நாமாக இருப்பவர். கடவுளைத் தேடுவோர் எந்த மனநிலையில் எந்த ஒரு சூழ்நிலையில் தேடுகிறார் என்பதை அறிதல் அவசியம். தேவைக்கு மட்டும் கடவுளை நினைத்தால் கடவுள் நம்மோடு இரார், அவரின் பிரசன்னத்தை உணரமுடியாமல்தான் நாம் வாழுவோம். கடவுள் நமது தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறார். எல்லாம் கடவுளிடமிருந்து தான் வருகின்றது. நமக்கு முழு சுதந்திரம் கொடுத்து நிகழும் அனைத்தையும் அவர் அனுமதிக்கிறார். தவறும் போது தேற்றவும், அன்பு செய்யவும் காத்திருக்கிறார். அறிவியல் வளர்ச்சியில் சிந்தனைக்கு எட்டாத அளவிற்கு வளர்ந்து வரும் சூழலில் நாம் ஒவ்வொருவருமே கடவுள் என நினைக்கும் நிலையும் ஏற்படும். யார் கடவுள்? எங்கு இருக்கிறார் அவர்? கட ூ உள் ஸ்ரீ கடந்தும் உள்ளே இருப்பவர். கடவுள் நமக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கிறார். கடவுள் இல்லா இடமில்லை. காற்றிலும், நீரிலும், மணற்பரப்பிலும், மலையிலும், இயற்கையிலும், உயிரினங்கள்; அனைத்திலும் இருக்கிறார். கடவுளின் இந்த பரிமாணங்களை அனுபவப்பூர்வமாக பார்ப்பதுதான் ‘கடவுளனுபவம்’. தினம் தோன்றும் சூரியனிலும், வானத்தில் மின்னும் நட்சத்திரத்திலும் நீங்கள் வாசிக்கும் எழுத்திலும், நான் எழுதும் வார்த்தையிலும், நம் சிந்தனை செயல் ஒவ்வொன்றிலும் வளமையாக கடவுள் இருக்கிறார். இந்த கடவுள் பரிமாணத்தைப் பிரிப்பது நமது சுயநலமும் மதவாதமும்தான். மதத்தை மறந்து, சுயநலம் விடுத்து கடவுளோடு இணையும் போது நம்மையும் தாண்டிச் செயல்படுகின்ற தகுதியைப் பெறுகிறோம். இதனால் அசாத்தியமான காரியங்கள் சாத்தியமாகின்றன. அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் எங்கும் பரவி மணம் பரப்புகிறது. கடவுளை உணரும் வழியாக செபத்தையும், தியானத்தையும் அன்றாடம் நம் நிகழ்வுகளில் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். கடவுளை வருடத்திற்கு ஒருமுறை விழா எடுத்து நினைத்து பார்ப்பதும், தேவையில் ஓடிவந்து தேடுவது இல்லாமல், கடவுள் இல்லாமல் நம் அன்றாட வாழ்வை முழுமையாக வாழ்ந்துவிட முடியாது என்ற எண்ணத்தில் தினமும் அவரின் பிரசன்னத்தை நம்முள் உணர வேண்டும். ; விவேகானந்தர் இளையோரிடம் ‘உங்கள் முயற்சிதான் உங்களுக்குக் கடவுள்’ என்கிறார். அந்த வகையில் கடவுளுக்கு ஒரு உரு கொடுத்து குணநலன்களுக்குள் கட்டுப்படுத்த முடியாது. எங்கும் எதிலும் இருக்கும் கடவுளைக் காண நாம் தயாராக வேண்டும், நம்முள் கடவுளைப் பிறர் காண நம் வாழ்க்கைமுறை அமைய வேண்டும். கடவுளிடமிருந்துதான் மனிதன் வந்தான் என்கிற உண்மையை உணரும்போது மனிதன் கடவுளாதல் என்பது மிகவும் எளிய காரியமாகும். ஆனால், அந்த உண்மையை எப்போது, எப்படி, யாரால் உணர்வது என்பதுதான் இங்கே முக்கியம். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பார்கள். ஏழைகளுக்கு உதவி செய்து அவர்கள் பெறும் மகிழ்ச்சியில், புன்னகையில் இறைவனைக் காணலாம் என்பதே “ஏழையின் சிரிப்பில் இறைவன்”. படைக்கப்பட்ட அனைத்தும் கடவுள் தன்மையோடுதான் உள்ளன. வாழ்வில் ஏற்படும் அனுபவங்கள் (நல்லதும் கெட்டதும் கலந்து) மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களால் ஒவ்வொரு உயிர்களிலும் எதிர்மறையான அனுபவப்பதிவுகள் உண்டாகின்றன. இதன் மூலம் நாம் கடவுள் தன்மையிலிருந்து வெகுதூரம் விலகிப் போய்விடுகிறோம். ஆன்மிகம் என்பது வெறும் கடவுள் வழிபாடு என்றில்லாமல் நமக்குள்ளே கடவுளைத் தேடுவதாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான ஆன்மிகம். வெறுமனே பூக்களாலும் பாக்களாலும் அர்ச்சித்து வழிபட்டால் மட்டும் போதாது. நமக்குள்ளே இருக்கும் உண்மைத் தன்மையை உணர்ந்து அறவாழ்க்கை வாழ வேண்டும். அறவாழ்க்கை என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய நற்பண்புகளைக் கொண்டதாக அமைய வேண்டும். நம்மை நாம் உணர்வதற்குத் தடையாக உள்ள பல அம்சங்களை நம்மாலேயே உணர முடியும். நம்மிடம் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து அதன் மூலம் சரியானப் பாதையை நாமே தேர்ந்தெடுத்து நல்வழியில் நாம் பயணிக்க வேண்டும். கடவுள் என்றால் ஏதோ அபரிமிதமான சக்தி கொண்டது என்று நினைத்து பயந்துகொண்டோ, அதைநாம் அடைய முடியாது என்கிற விரக்திகொள்ளவோ வேண்டியதில்லை. நிச்சயமாக நம்மால் அந்த நிலையை அடைய முடியும். இறைத்தன்மை என்பது வேறு எங்கும் சென்று விலை கொடுத்து வாங்கக்கூடிய பொருளல்ல. அதை நம்முள்ளே நம் மனதிலிருந்துதான் கொண்டுவர வேண்டும். இதற்கு நம் செயல்கள் அறநெறியில் இருத்தல் அவசியம். அதில் வெற்றி பெற்றவர்கள் மிகச் சிலரே. இதையே “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்”. ஊரெங்கும் கொள்ளையடிக்கிறார்கள்; நாம் மட்டும் ஒழுங்காக இருந்து என்ன பிரயோசனம் என்று நினைப்பவர்கள் நம்மில் நிறைய பேர். இப்படியே அனைவரும் நினைத்தால் நேர்மையை நாம் எங்கே காண முடியும்? எனவே, நம்மால் இயலும் என்று எண்ணி நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்து நாம் வாழ்ந்தால் போதும். நாம் இறைத்தன்மையை அடையலாம் என்பது உண்மை. முகநூலில் ‘நான் கடவுளை பார்த்தேன்’ என உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள். ஒருவன் கூட லைக் பண்ண மாட்டான். விமர்சனமும் பண்ண மாட்டன். காணாமல் கடவுளை நம்புவார்கள். ஆனால் கண்டால் ஓடி விடுவார்கள். மதத்தின் பெயரால் தாக்குவார்கள். சிலர் கல்லால் கூட அடிக்க வைப்பு உண்டு. நம்மை படைத்த கடவுள் ஒருவன், நாம் படைக்கின்ற கடவுள்கள் ஆயிரம். அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் அவரை சென்றடைய தூதர்கள் எதற்கு, கடவுளின் பெயரில் நம்முள் பேதங்கள் எதற்கு? கொலைகள் எதற்கு? மேனேஜர் எதற்கு? என்பன போன்ற எக்கச்சக்கமான சிந்தனைகளையும் கேள்விகளையும் சமீபத்திய ‘பி.கே’ (Pமு) திரைப்படம் எடுத்து வைக்கிறது. “கடவுளே உன்னை எல்லா மத அடிப்படையிலும் பிரார்த்திக்கிறேன். நான்முட்டிப் போட வேண்டுமா? சலாம் போட வேண்டுமா? நமஸ்காரம் செய்ய வேண்டுமா? எல்லாவற்றையும் செய்கிறேன். மாலையில் விரதம் இருக்கிறேன், காலையில் விரதம் இருக்கிறேன், உடம்பை சாட்டையால் அடித்துக் கொள்கிறேன் இத்தனை செய்தும் ஏன் எனது கோரிக்கையை கேட்க மறுக்கிறாய்? வாழ வழியின்றி தவிக்கிறேன். நண்பர்கள் இல்லை. நான் எந்த வகையில் தொழவேண்டும், யாரைத் தொழவேண்டும் என்று நீ தான் கூற வேண்டும்” என்று வெள்ளந்தியாக ‘பி.கே’ (Pமு) திரைப்படத்தில் அமீர்கான் கதறும் போது அவர் கடவுளைத் தேடும் பலரை நமக்கு நினைவூட்டுகிறார். மதம் என்பது உணர்வற்ற மக்களின் உணர்வாக இருக்கிறது. இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைப் பெருமூச்சுதான் மதம். “மதம் மக்களுக்கு அபின்” - காரல் மார்க்ஸ். மதங்களில் கடவுளைத் தேடுவது ஆழ்கடலில் விழுந்த குண்டூசியை தேடுவதற்கு சமம். எல்லா மதங்களுமே ஒரு வாழ்க்கை முறையைப் போதிக்கின்றன. மதங்கள் மூலம் கடவுளை அடைவது என்பது ஆன்மிகத்தோடு மட்டும் தொடர்புடையவையல்ல அவை ஆதிகாலம் தொட்டே பண்பாட்டோடும் அரசியலோடும் பொருளாதாரத்தோடும் கலாச்சாரத்தோடும் தொடர்பு கொண்டவை. மதங்கள் நிறுவுகின்ற அல்லது தான் நிறுவ விரும்புகின்ற பொருளாதாரத்தையும், அரசியலையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களின் மனதை இணங்க வைக்கக் கூடிய பண்பாட்டு பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளன, இன்றும் ஆற்றி வருகின்றன. அதனால்தான் அவற்றில் நிலவுகின்ற அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டில் எந்த விதமான மாற்றம் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் கடுமையாக எதிர்க்கின்றன. மதங்களில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டல் சமூக அமைப்பை நியாயப்படுத்தும் சித்தாந்தப் பணியை ஆற்றி வருகின்றன. அந்த அமைப்பிலும் அதிலிருப்போரையும் கட்டிக் காக்கும் பண்பாட்டுப் பணியையும் ஆற்றி வருகின்றன. அவை சமூகப் பிரச்சினைகளைத் தனிமனிதப் பிரச்சினைகளாகக் சுறுக்குகின்றன. ஏழ்மை, வறுமை, சாதிகள், வேலையில்லாத் திண்டாட்டம், ஏற்றத்தாழ்வு அனைத்துக்கும் காரணங்களாக ஒருவரின் பிறந்த நேரம், முற்பிறவியில் செய்த பாவம், புண்ணியம் என்பவற்றைக் கற்பித்து அப்பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருக்கும் உண்மையான சமூகக் காரணங்களை மக்கள் பார்க்கவிடாமல் தடுக்கின்றன. இதன் மூலம் உண்மை கடவுளை மறைத்து பிம்ப கடவுளை நமக்குக் காட்டி நம்மை ஏமாற்றி மதவாதிகள் வயிறு நிரப்புகிறார்கள். மனிதத் துயரங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியவையாக, நம்பிக்கை இழந்த இதயங்களுக்கும், உடைந்து போன உள்ளங்களுக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடியவையாக மதங்கள் சில நேரங்களில் விளங்கினாலும் அவை தற்காலிகமானவையே. வலியை உணராமல் இருக்கத் தரப்படும் மயக்க மருந்துகள் போன்றவைகளே. அவை நமக்கு நிரந்தரத் தீர்வை வழங்கமாட்டா. அவை வழங்குவதாகக் கூறும் ஆன்மீக நிறைவுகள் போலியானவை. அன்பே சிவம் என்று பேசிய சைவர்கள்தான் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்றதாகப் பண்டையத் தமிழக வரலாறு கூறுகிறது. அடிமைகளின் விடுதலைக்குக் குரல் கொடுத்த யூதத் தச்சனின் மகன் இயேசு கிறித்துவை பின்பற்றி உருவாகிய கிறித்துவ மதமும், அமைதி மார்க்கம் என அழைக்கப்பட்ட இஸ்லாமும்தான் பிற்காலத்தில் போர்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கக் காரணமாக அமைந்தன. மேலும் கிறித்துவ மதம் ஆசிய, ஆப்ரிக்க, அமெரிக்கக் கண்டங்களில் ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆதிக்கத்திற்கும், அமெரிக்காவின் பூர்வீக குடியான செவ்விந்தியர்கள் அழிப்புக்கும் பக்க பலமாக இருந்து வந்துள்ளது. புத்தனால் உருவாக்கப்பட்டு அகிம்சையைப் போதித்த புத்த மதம் இன்று இலங்கையில் தமிழீழ மக்களைக் கொன்று குவிக்க பக்க பலமாக இருந்தது. வர்ணாசிரமத்தின் பெயராலும், சாதிகளின் பெயராலும் இந்து மதம் இழைத்து வரும் மனிதப் பண்பற்ற கொடுமைகளை நமது சமூகம் தொடர்ந்து அனுபவித்து வருவதைப் பார்க்கிறோம். சாதிகளின் அடிப்படையில் அமைந்த நிலமான்ய உற்பத்தி முறையைக் கட்டிக் காப்பாற்றி வருவதில் அதன் பங்கை நாம் நன்கு அறிவோம். இவை எல்லாம், மதங்கள் மனித சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்கு எவ்வளவு விரோதிகளாக உள்ளன என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள்தான். கடவுளைக் காண, கண் முன் இருக்கும் ஏழைகளை நேசி. தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வந்து கோயிலில் காணிக்கை போடுவார்கள், கோயிலில் சிலையை வணங்க வேண்டாம் உயிரோடு இருக்கும் தாயை நேசி, தந்தையை வணங்கு. பூவில், பூவிலிருக்கும் தேனில், தேனை குடிக்கும் வண்டில், வண்டு வசிக்கும் மரத்தில், மரத்தின் நிழலில் - என எங்கும் எதிலும் கடவுள் அசைவாடுகிறார். தினம் நம்மை சுற்றி நிகழும் செயல்களில், நமது அனுபவங்களில், இயற்;கையில், எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைக் காண்போம் நம் கண்களை திறந்து திறக்கட்டும் நம் கண்கள். ஜோ தயசளனடி;பஅயடை.உழஅ இயற்கையை மையப்படுத்திய வாழ்வின் தேடல் இன்றைய வரலாற்றில்; சுற்றுச்சூழல், அறிவியல், ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது. வாழும் பூமி வளம் பெறாவிட்டால் வறட்சியில் நாம் வாழ புரட்சி வெடிக்கும.; அதற்கு முன் இயற்கையை நம் வாழ்வின் மையமாக்குவோம், வளம் பெறுவோம். இப்பூமியில்; மனிதனும் மற்ற உயிரினகளும் முழுமையான வாழ்வு வாழ்வதற்கு உறுதியான இயற்கை ஆன்மீகத்தையும,; இதனை பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவது மிகவும் அத்தியாவசமானது. இயற்கை அறிவியல் என்பது உயிரினங்கள் ஒன்றையொன்று எவ்வாறு சார்ந்து வாழ்கின்றது என்பதைப் பற்றியும், சமூக, பழக்கவழக்கம், தன்னகப்படுத்துதல், சூழ்நிலைக்கு ஏற்றார்ப்போல உபயோகித்தல் என்ற பலகோணங்களை உள்ளடக்கியுள்ளது. இயற்கையோடு இணைந்த வாழ்விற்கு ‘இயற்;கைநீதி’ அத்தியாவசியமானது. இது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவுகளின் கொண்டாட்டம். அதாவது வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லாருக்கும் எல்லாமுமாய் இருப்பது. இதைத்தான் தொடக்கநூல் 2,7ல் சிறப்பாக ஆதாம் மண்ணில் இருந்து உருவாக்;கப்பட்டவன். இந்த இயற்கையில் இருந்து மனிதனைப் பிரித்தால்.... இயற்கை தன்னுடைய சுய வளர்ச்சிக்கு உள்ளாகும். அதாவது மனிதனின் குறுக்கீடுகள் இல்லாமல் போகும் போது என்னவாகும் என்ற கேள்வி நம் உள்ளத்தில் எழச் செய்கின்றது. மனித உடலானது பஞ்சப்பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பாலானது. இங்குதான் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே ஒரு உறவு உள்ளது. மனிதன் மட்டுமல்லாது இயற்கையில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் இந்த பஞ்சப்பூதங்களால் ஆனது. இவைகளில் ஒன்றைப் பிரித்து எடுத்தால் கூட உயிரினம் தன்னிலை இழப்பது உறுதி. இதனை ஒரு அமைதியான வாழ்வாதாரத்திற்கான ஒரு குறியீடாக, மேலும் இறைவனின் படைப்பில் ஒரு நிலையான அமைதியின் உருவாக குறிப்பிடலாம். இது அமைதிக்கு எதிரானது, என்பது மனிதன் இயற்கையில் இருந்து வெளியேறுகின்றான் என்பதைக் குறிக்கும். இயற்கை மனிதனுடையது அல்ல மாறாக மனிதன்தான் இயற்கையோடுள்ளவன். அதாவது மனிதர்களாகிய நாம்தான் இயற்கையைச் சார்ந்து வாழ்கிறோம் என்பதை உணரவேண்டும். இயற்கையில் மனிதனை மையப்படுத்திய வாழ்வில், இயற்கையைப் பாதுகாப்பது என்றால் அது மனிதனைச் சார்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த அனுகுமுறையை மூன்று வகைகளில் பிரிக்கலாம் 1. மனிதன் இயற்கையைவிட உயர்ந்தவன் 2. மனிதனுக்குள் இயற்கை 3. மனிதனும் இயற்கையும் முதல் இரண்டு அணுகுமுறைகளுமே மனிதனின் சுயகர்வத்தைக் குறித்தது. மனிதன், மற்றும் இயற்கையானது செயல்பாடுகளின் நிமித்தம் கொண்டுள்ள உறவினைக் குறிக்கக் கூடியது. இதனை 1. ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது 2. ஒன்றையொன்று சார்ந்தது 3. ஒன்றையொன்று சார்ந்து நில்லாதது என்று மூன்று விதங்களில் குறிப்பிடலாம். இந்த மனித இயற்கை உறவுமுறைகளில் விரிசல்கள் வரும்போதுதான், இயற்கைக்கு எதிரான குற்றங்களும், இறைவன் அருளிய கொடைகளை மனிதனின் சுயநலத்திற்காக பயன்படுத்துவதும், அழிவுகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக காற்று, தண்ணீர், இரைச்சல் போன்றவை மாசுபட்டு சுற்றுச் சூழலுக்கு எதிரான பாவங்களுக்கு மனிதன் உள்ளாக்கப்படுகின்றான். இன்றையச் சூழலில் விண்வெளியில் காணப்படும் அதிக அளவிலான கார்பன்-டை- ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் நமது எதிர்கால சந்ததியினருக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. நமது வருங்கால தலைமுறையினருக்கு நல்லதொரு வாழ்க்கை அமைவதை, நாம், நமது செயல்பாடுகளின் மூலம் தடுப்பது நீதியற்ற செயல்பாடு ஆகும். முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பத்திநாதர், “இன்றைய உலகில் இயற்கைக்கு எதிரான பாவங்கள் குறித்து விழிப்பாய்; இருங்கள்” என்று தனது சுற்றுமடலில் கூறியுள்ளார். சுற்றுச் சூழலில் நமது கடமை என்ன என்பது, வருங்கால வளரும் சமூகத்தினரை நினைவில் கொண்டு இயற்கை உணர்வோடு (இறுதிவரையில், இயற்கையின் மடியில், எதிர்காலத்திற்காக இயற்கையை பாதுகாத்து வைத்து) வாழ அழைக்கப்பட்டிருப்பதே. மனிதர் மட்டுமன்றி ஏனைய உயிரினங்களிடத்தும் நிலத்துடனும் நேசமாக வாழ்தல், இயற்கையைப் போற்றி மதித்து நடத்தல் முதலியன உலகெங்கும் உள்ள பழங்குடி மக்களைக் குறித்த சில பொதுவான உண்மைகள் ஆகும். தம்மைச் சுற்றி உள்ள அனைத்து உயிரினங்கள் மட்டுமின்றி, நீர்நிலைகள், வானம், கற்கள் போன்ற அனைத்துமே தமது முன்னோர்களின் மறு உருவங்கள் என்ற நம்பிக்கையும் பொதுவாக பழங்குடி மக்களுக்கு உண்டு. அதனால் அவர்கள் நம்மைப் போல இயற்கையை வென்று அடக்கியாள வேண்டும் என்றோ, இயற்கைச் செல்வங்கள் அனைத்தும் நமது வசதிவாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளன என்றோ கருதுவதில்லை. எனவே, அவர்கள் வாழுந்த முறையோ பெரும்பாலும் தமது சூழலை நாசப்படுத்தாவண்ணம் அமைந்திருந்தது. மேலும், அவர்களில் பெரும்பாலான குழுக்களுக்கு சொத்துப்பாகுபாடு தேவையற்ற ஒன்றாக இருந்து வந்தது. ஆனால், இன்றையச் சூழலில் மக்களின் வாழ்வியல் முறையானது, இயற்கையைப் பெருமளவிற்கு மாசுபடுத்தி, நியாயமற்ற வாழ்வுமுறையை உலகில் ஏற்படுத்தியுள்ளது. காலநிலைமாற்றம் என்பது காலநிலையை பொறுத்தது அல்ல, இது கடலின் நீர்மட்டம் உயர்வது, பனிப்பாறைகள் உருகுவது போன்றவைகளும் போல அல்ல என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இது எல்லாம் நம்மைப்பற்றியும், நமது வாழ்வு, இயற்கை இவையெல்லாம் கடந்து பணக்காரர்களும், பதவியில் உள்ளவர்களும் தங்களுடைய தனிப்பட்ட சுயநலத்திற்காக, சுகமான வாழ்விற்காக ஏழைகளை ஏமாற்றி, இயற்கையை அழித்து, அவர்கள் செழித்துவாழ்வதன் விளைவுதான். இதையே மகாத்மா காந்தி சொல்வார், “மனிதனின் தேவைக்கானது எல்லாம் இயற்கையில் உள்ளது ஆனால் அவன் பேராசைக்கானது இல்லை.” 2010-ம் ஆண்டிற்கான சுற்றுச் சூழல் தினமானது பலகருத்துகளை நம்முன் வைத்துள்ளது. “பல்வேறு உயிரினங்கள், ஓர் பூமி, ஓர் எதிர்காலம் என்ற தலைப்பானது நம்மிடையே பல கேள்விகளை தொடுத்து தொடர் வளர்ச்சிக்கான வழிமுறைகளை விட்டுச்சென்றுள்ளது. லாரி. எல். ராஸ்முசன் அவர்கள் ஷ“ சுற்றுச் சூழல் நீதி என்பது சமூக நீதியும் கூட மேலும் இந்த பூமியை பாதுகாப்பது என்பது இயற்கையின் அழுகுரலோடு மக்களின் அழுகுரல் சேரும் போதுதான் துவங்கும்” என்கிறார். இதில் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிலைக்கு கொண்டுவரவேண்டும் ஏனெனில் இந்த பூமியானது அவர்களுடையது. இந்த மக்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவானது வெட்ட தலித்து மக்களுக்கு பூமியும், ஆதிவாசிகளுக்கு காடும், மீன்பிடிப்பவர்களுக்கு கடலும் என்ற நிலை மாறி அனைத்தும் அனைவருக்கும் என்ற நிலை வரவேண்டும். வாழும் எல்லா உயிர்களுக்கும் பசி என்ற ஒன்று உண்டு என்பதை மனிதன் உணர வேண்டும். ஏனெனில் மனிதனை முன்னிலைப்படுத்தும்போது மனிதன் மற்ற உயிர்களை மறந்து விடுகின்றான். மனிதன் இயற்கை மையப்படுத்தபட்ட வாழ்வு வாழ வேண்டும். அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு உரிமை உண்டு. ஆறுகளும், ஏரி, குளங்களும் கூட சிறு சிறு உயிரினங்கள் வாழ்வதற்கான வாழ்விடங்கள். எனவே, இயற்கையைப் பாதுகாக்க, சுற்றுச் சூழல் நீதியை நிலைநாட்ட தேவையான அனைத்து முயற்சிகளும் அடிமட்டத்திலிருந்து துவங்கப்படவேண்டும். தனிப்பட்ட மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவு அனைத்து (சமூக, நாடு, கலாச்சார) நிலைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் இயற்கையை மையப்படுத்திய வாழ்வின் தேடல் முழுமைப் பெறும். ஆண்டோ யவெழதழந20;பஅயடை.உழஅ கடவுளை நோக்கிய அறிவியலும் அறிவியலாளர்களும் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையே இணைக்கவே முடியாத அளவிற்கு வேறுபாடுகளும், எதிர்மறை கருத்தமைவுகளும் உள்ளனவா? - என பலரின் எண்ணத்தில் சிந்தனைகள் அல்லது கேள்விகள் எழ அதிக வாய்ப்புகள் உண்டு. மதத்தைவிட அறிவியல் சக்திவாய்ந்தது என்றோ, உண்மையுடையது என்றோ, அல்லது நம் தனிமனித வாழ்விற்கு உயரிய அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய ஒன்று என்றோ, நம்மில் பலருக்கு எண்ணத்தூண்டலாம். இது ஒருபுறமிருக்க, என்னதான் இன்றைய நவீன அறிவியல் அளப்பறிய சாதனைகளை செய்திருந்தாலும் மாபெரும் வெற்றிகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும,; இதுவரை நாம் கண்டிராத ஒன்றை காணக்கூடியதாகவோ, கேட்கமுடியாத ஒன்றை கேட்க கூடியதாகவோ, உணரமுடியாத ஒன்றை உணரக்கூடியதாகவோ மாற்றியிருந்தாலும் இந்த 21-ம் நூற்றாண்டிலும் மனிதனின் அறிவியல் சிந்தனை அனுதினமும் வளாந்துகொண்டுதான் இருக்கின்றது என்பதுதான் உண்மை. இன்றைய அறிவியல் தனது வளர்ச்சியில் உச்சநிலையை அடைந்து விட்டது என்றோ, இன்றைய அறிவியலுக்கு முன் எதுவும் மறைவாகவோ அல்லது ஒழித்துவைக்கப்பட்டோ இல்லை என எண்ணுவதோ, என்ற முடிவுக்கு வருவதோ ஓரு நியாயமான அல்லது உண்மையான நிலைப்பாடாகாது. கருவறையிலிருக்கும் கருவிற்கு எந்த நொடிப்பொழுதில் உயிர்வருகிறதென்றோ எப்பொழுது ஒருவர் இறப்பார் என்றோ, எப்போது ஒருவருக்கு என்ன? எப்படி? எங்கு? நடக்குமென்றோ இதுவரை யாரும் அறிந்ததில்லை. எந்த அறிவியலும் சரியானதொரு பதிலை கொடுத்ததுமில்லை. ஏன் ஓரு நாத்திகன்கூட இவ்வினாக்களுக்கு சீரியதொரு புரிதலை கொணரமுடியவில்லை. எந்த ஒரு மனிதனின் சிந்தனைக்கும் ஓர் எல்லையுண்டு. மனிதனைச்சுற்றி பல மாயைகள், புரியாத புதிர்கள் எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒன்றுமட்டும் மிகவும் உண்மை என்பதை நான் பெரிதும் நம்புகிறேன். அது என்னவென்றால் மாயமான சக்திகளின் உலகத்தில் அன்றாடம் பயணம் செய்து பல நவீன தொழில்நுட்பங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்ளும் இன்றைய நாத்திக அறிவியல் மேதைகள், ஓரு நாள் தொழில்நுட்பங்களுக்கெல்லாம் தொழில்நுட்பமான, அறிய பல கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, எங்கும் வியாபித்திருக்கும் எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல அந்த ஓர் அற்புத சக்தியாகிய கடவுளை அறிந்து-கண்டு கொள்வார்கள் என்பதை நான் நம்புகிறேன். கற்களை உரசி நெருப்பினை கண்டுபிடித்தது முதல் பல புதிய கண்டுபிடிப்புகளை இவ்வுலகிற்கு கொணர்ந்துள்ள அறிவியலின் வளர்ச்சி, இறுதியில் இறைவனை கண்டுபிடிப்பதே மனித அறிவின் முதிர்ச்சியையும், அறிவியல் வளர்ச்சியின் உச்சக்கட்டத்தையும், மன்pத அடையாளம் முழுமைபெருதலையும் இவ்வுலகிற்கு உணர்த்துகிறது. கடவுள் இருக்கிறார் என சான்று பகரும் பல முக்கிய அறிவியல் விஞ்ஞானிகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கடவுள் இல்லவே இல்லை என்றும், இவை இரண்டிற்கும் இடையில் இன்னும் சில மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஓராற்றல் செயல்படுகிறது என்று மட்டும் கூறும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொருவகை உயிரினங்களிடையே காணப்படும் அடிப்படை வேறுபாடுகள் மற்றும் அவைகளின் இடையில் இருக்கும் இடைவெளியை இணைக்கும் காரணிகளை இன்றளவும் அறிவியல் தேடிக்கொண்டுதான் இருக்கின்றது. அறிவியலாளர் வில்லியம் கெல்வின் கூறுகையில், “கடவுளை நம்பாத எந்த ஒரு அறிவியல் அறிஞரும் அறிவியலை ஆழமாகவும் வரலாற்றுப்பூர்வமாகவும் கற்காதவராகவே இருப்பார்,” என்கிறார். உலகம் போற்றும் அறிவியல் மேதை ஐசக் நியூட்டன் தான் விவிலியத்தில் கடவுளை உணர்வதாகவும் தினமும் திருவிவிலியத்தை வாசிப்பதாகவும் கூறுகிறார். அறிவியல் மேதை ஆலபர்ட் ஐன்ஸ்டீன் கடவுள் எவ்வாறு இவ்வுலகை படைத்தார் என்றும், கடவுளின் சிந்தனையை தான் அறிய வேண்டும் என்ற உயரிய ஆவலை கொண்டுள்ளதாகவும் கூறுகின்றார். மேலும் அறிவியலை கற்க கற்கதான் அதிகம் கடவுளை நம்புவதாகவும் கூறுகின்றார். 21-ம் நூற்றாண்டின் இயற்பியல் அறிஞர் பால் டேவியஸ், “மதங்களைவிட அறிவியல்தான் கடவுளை நோக்கிய பாதையை மிகவும் உறுதியாக மனிதர்க்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது,” என்கிறார். பல அறிவியல் மேதைகள் கடவுள் இருக்கிறார் என்று உறுதியாகவும் மேலும் மதத்திற்கும் அறிவியலுக்கும் இடைவெளி கிடையாது என்றும் இவை இரண்டும் மனிதர்கள் கடவுளை அறிந்து கொள்ள பேருதவிப் புரிகின்றன என்றும் சான்று பகர்கின்றனர். 1969-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 35மூ அறிவியல் அறிஞர்கள் நாத்திகர்களாக இருக்கின்றார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட மற்றொரு கணிப்பில் 90மூ அறிவியல் அறிஞர்கள் கடவுள் நம்பிக்கையுடையவர்களாகவும் 40 சதவீதத்தினர் வாரத்திற்கு ஒருமுறை கோவிலுக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது. மனித வரலாற்றில் தலைசிறந்தவர்களாகவும் திறமை படைத்தவர்களாகவும் கருதப்பட்டோர் அல்லது போற்றப்பட்டோர் ஏதோ ஓரிரு துறையில் மட்டும்தான் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள், ஏன் இன்றும் இருக்கிறார்கள். எல்லாமறிந்த எல்லாவல்ல இறைவன் மனிதர்களிடம் மேற்கொள்ளும் அறிவு பகிர்வே அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளும் தொழிற்நுட்ப வளர்ச்சிகளும் ஆகும். சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவிலுள்ள இருபத்தொன்று புகழ்மிக்க பல்கலைகழகங்களின் 2,198 பேராசிரியர்களில், அறிவியல் பாட பேராசிரியர்களை ஒரு குழுவாகவும் கலை பாட பேராசிரியர்களை மற்றொரு குழுவாகவும் பிரித்து மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் கடவுள் நம்பிக்கையில் ;மேலே கூறப்பட்ட இரு குழுக்களுக்குகிடையே மகிச்சிறிய சதவிகித வித்தியாசமே இருந்ததாம் மேலும் ஒருவரின் கடவுள் நம்பிக்கை அவரின் கல்வி அறிவையும் திறமையையும் பொருத்ததல்ல, மாறாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை குழந்தை பருவத்திலிருந்தே கடவுள் நம்பிக்கையில் வளர்ப்பதில் தான் இருக்கிறது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. மார்ட்டின் அயசவiளெனடி1;பஅயடை.உழஅ ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்! உலகின் பிரபல நியூரோ ஸைன்டிஸ்டான (நெரசழளஉநைவெளைவ) ஆண்ட்ரூநியூ பெர்க்கினின் ஆராய்ச்சிகளை ‘ஞானஆலயம்’ என்ற இதழில்; கண்டேன.; அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உலகெங்கும் உள்ள ஆன்மீகவாதிகளுக்கு கடவுளை மூளை இயல் விஞ்ஞான அடிப்படையில் நிரூபித்து பெரும் நம்பிக்கையை ஊட்டிவருபவர் அவர். தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும் போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்கவிதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் அது! ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் நூற்களைப் படைத்துள்ளார். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்துள்ளார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மனமையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார். ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் ஃபோடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி(ளiபெடந phழவழn நஅளைளழைn உழஅpரவநன வழஅழபசயிhல). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காம கதிர்களை வெளிப்படுத்தும் ஒருவித திரவம், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்தக் கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணிணி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றியப் படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். ஆறு பகுதிகளில் ஏற்படும் அதிசய மாறுதல்கள் புனித பிரான்சிஸ்கு அசிசியின் (ளுவ குசயnஉளை ழக யுளளளைi) விதிமுறைகளைப் பின்பற்றும் கன்னியர்களையும், திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார். அந்த ஆறு முக்கியப் பகுதிகள் : 1) முன் மடல் (கசழவெயட டழடிந) 2) லிம்பிக் அமைப்பு (டiஅடிiஉ ளலளவநஅ) 3) ஆன்டீரியர் சிங்குலேட் (யவெநசழைச உiபெரடயவநன) 4) அமிக்தலா (யஅலபனயடந) 5) தாலமஸ் (வாயடயஅரள) மற்றும் 6) சுவர் மடல் (pயசநைவயட டழடிந). தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும் போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாகக் கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. நம்மை வியக்க வைப்பது என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வௌ;வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறித்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது. ஆகவே இறைநினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும் என்பது உண்மையாகும் அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள் பிரான்சிஸ்கன் கன்னியர்கள் மற்றும் புத்த குருமார்களைச் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்தியபின் ஆண்ட்ரூ பின்வரும் உண்மைகளைக் கண்டறிந்தார். 1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வௌ;வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்கக் கடவுள் இன்னும் அதிக ஆத்மார்த்த நாயகன் ஆகின்றார்! 2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வௌ;வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வௌ;வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான். 3) மதநம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும் போது உடல் நலமும் உள்ள நலமும் மேம்படுகிறது. 4) நீண்டகால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றிவிடுகிறது! இது மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது. ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது. 5) அமைதி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக் கொண்டே வருகிறார். இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களுள் அனேகமானோர் சமாதானத்திற்கான நோபல் பரிசுகளை பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார். மார்ட்டின் லூதர் கிங், பிஷப் டெஸ்மாண்ட் டுடு, தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டிருந்த அதீத தயை உணர்ச்சியே ஆகும்! மேலும் ஆன்மீகவாதிகளுக்கு அறிவுத்திறன், தகவல் தொடர்புதிறன், படைப்பாற்றல் திறன் (ஊழபnவைழைnஇ ஊழஅஅரniஉயவழைnஇ உசநயவiஎவைல) ஆகிய மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது. இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது! ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிராத்தனை, வழிபாடு, இதர மதச்சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான படங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது. 1) முதலாவது மேப் ஆழ்மனம் பற்றியது. அன்றாட உலகில் போட்டிக்கு ஈடு கொடுத்து உயிர் வாழ்ந்து வாழ்க்கையை நடத்துவது. ஊடலை ஆரோக்கியத்துடன் தக்கவைத்துக் கொள்வது ஆகியவற்றை காண்பிக்கிறது இந்தப் படம்! 2) இரண்டாவது மேப் பிரபஞ்சம் பற்றிய முன்னுணர்வு நிலையை நமக்குச் சித்தரிக்கிறது. புலன்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டது இது! படங்களும் விளக்கங்களும் திபெத்திய யோகிகள் தியானம் செய்யும் போது அதன் விளைவுகளை மூளையின் இந்தப் படங்களில் பார்க்கலாம்! குசழவெயட டழடிந (முன்மடல்) சிங்கிள் ஃபோடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி (ளுPநுஊவு) என்றதொழில்நுட்ப உத்தி மூலமாக யோகிகள் தியானம் செய்யும் போது மூளைப் பகுதியான ஃப்ரண்டல் லோப் எனப்படும் முன்மடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்டறியப்பட்டது. இரத்தஓட்டம் அதிகரிப்பது அதிகச் செயலாற்றலை அந்தப் பகுதியில் காண்பிக்கிறது. இடதுபக்கப் படம் மூளை சாதாரண நிலையையும், வலதுபக்கப் படம் மூளை தியானத்தில் இருக்கும் நிலையையும் காண்பிக்கிறது. இதில் ஒருமுனைப்படுத்தும் பகுதிகள் அதிகமாக ஒளிர்வதைப் பார்க்கலாம். Pயசநைவயட டுழடிநள (சுவர் மடல்) சுவர் மடலிலோ குறைந்த செயல்பாடே காண்பிக்கப்படுகிறது. இந்தப் பகுதிதான் இடம் மற்றும் காலம் பற்றிய உணர்வை நமக்குத் தெரிவிக்கிறது. இந்தப் பகுதியை முற்றிலுமாக அடைந்து விட்டோமானால் இடம் மற்றும் காலம் கடந்த நிலையை எய்து விடலாம். இது தியானத்தின் மூலமாக அடையப்படுகிறது. இது பற்றிய இன்னும் அதிகமான நுட்பமான படங்களும் ஏராளமாக எடுக்கப்பட்டுள்ளன. அவை தியானம் மூலம் எல்லையற்ற பிரபஞ்சத்தில் கடவுள் இயற்கையாக இருக்கும் நிலையை உணர்த்துகின்றன! நியூரோபிளாஸ்டிசிடி நியூரான்கள் ஒருகட்டத்தில் கற்பதை நிறுத்திவிடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதிவந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல், “மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை. உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்புச் செல்கள் மாறுகின்றன. இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசிடி! ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள் ஆகவே உலகில் நிலைபெற்றிருக்கும் கடவுள், அவரைப் பற்றிய ஆழ் மனநிலையில் நமது அறிவும் அனுபவமும் வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல், சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இதற்கு செபம் உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்க வைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது. தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது. நினைப்பவர் மனங் கோயிலாகக் கொண்டவன் மனத்துள் நின்ற கருத்தானை உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன் என்றும் உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்!!! என்ற வார்த்தைகளின் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது. கடவுள் அருளாலே கடவுள்; தாள் வணங்குவோம்!! ஜஸ்டின் ஆன்மீகம் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே ஒவ்வொரு மனிதனும் ஒரு சமுதாயத்தில் பிறக்கின்றான், சமுதாயத்தில் வளர்கிறான், சமுதாயத்தில் வாழ்கிறான் மற்றும் சமுதாயத்தில் இறக்கிறான். எனவே மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவன் சமுதாயம் என்ற ஒரு கட்டமைப்புக்குள் தெரிந்தோ தெரியாமலோ இருக்கிறான். தனி மனிதன் சமுதாயத்தை சார்ந்து வாழ்கிறான், சமுதாயம் தனித் தனி மனிதர்களால் கட்டியெழுப்பப்படுகிறது. எனவே மனிதனும் சமுதாயமும் இரண்டற கலந்த கலவை. இவை இரண்டையும் பிரித்து பார்க்க முடியாத ஒன்று. மீலவும் பிரித்து பார்த்தால் ஒவ்வொன்றும் அர்த்தம்; இன்றி தனித்து நிற்கும். இரண்டும் ஒன்று சேறும்போது தான் அங்கு இரண்டிற்கும் அர்த்தம் பிறக்கின்றன. எனவே தான் கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் “மனிதன் இயற்கையாகவே ஒரு சமுதாய விலங்கு, யார் ஒருவன் சமுதாயத்தில் வாழவில்லையோ அவன் ஒரு மிருகமாக இருக்க வேண்டும் அல்லது இறைவனாக இருக்க வேண்டும்,” என்று மிகத் தௌ;ளத்தெளிவாக சமுதாயத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவையும் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறுகிறார். மனிதனுடைய அக வளர்ச்சிக்கும் புற வளர்ச்சிக்கும் சமுதாயம் முக்கிய பங்காற்றுகின்றது என்றால் அது மிகையாகாது. அக வளர்ச்சிகளான ஒழுக்கம், ஆன்மீகம், நல்லுணர்வு, கல்வி, பண்பாடு, நல்ல பழக்க வழக்கங்கள் என பலவும், புற வளர்ச்சிகளான உடல், ஆரோக்கியமான வாழ்வு சுற்றுச்சூழல் மற்றும் உடல் உழைப்பு எனவும் மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சமூதாயம் உதவுகிறது. இதைத்தான் பேராசிரியர் பார்க் “ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ மனிதனாக பிறப்பதில்லை மாறாக மனிதனாக உருவாக்கப்படுகிறார்கள்,” என்று கூறும்போது ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ சமூதாயத்தால் மனிதனாக உருவாகிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுகிறது. சமூதாயத்தால் ஏதோ ஒரு வகையில் ஒதுக்கிதள்ளப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அடிமைப்படுத்தப்பட்டவர்கள், அசிங்கப்படுத்தப்பட்பவர்கள் தான் சமூதாய விரோதிகளாகவும், மனித உணர்வுகள், உறவுகள் அற்று மனித தன்மை இழந்து மிருகங்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதும் நாம் நம் அன்றாட வாழ்வில் காணும் எதார்த்தம். எனவே மனிதன் நல்லவனாவதும் தீயவனாவதும் சமூதாய வளர்ப்பினிலே என்றால் அது மிகவும் சாலச்சிறந்ததாகும். இத்தகைய சூழ்நிலையில் ஆன்மீகம் சமுதாயத்தில் எத்தகைய பங்கை வகிக்கிறது, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதைனை நாம் சற்று அலசிபார்த்தல் அவசியமாகிறது. ஏனென்றால் உலகில் பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு சமயத்தை தழுவி அதன் அடிப்படை ஆன்மீக கோட்;பாட்டை பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் கூறுவதென்பது மிகக் கடினமானது மற்றும் சிக்கலானது. ஏனென்றால் ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு ஆன்மீகவாதியும், ஒவ்வொரு தனி நபரும் ஒரு குறிப்பிட்ட ஆன்மீக வரையறையை அவர்களுக்கேற்றார் போல் பின்பற்றுகிறார்கள். எனவே ஆன்மீகத்தை அனைவருக்கும் பொதுவாய் வரையருத்தல் என்பது இயலாத, அனைவரையும் திருப்திபடுத்த முடியாத முயற்சி. இருப்பினும் பலத்தரப்பட்ட ஆன்மீகத்தின் மத்தியில் சமூக ஆன்மீகம் என்பது தான் சிறந்த ஆன்மீகமாகும். ஆன்மீகம் நாம் கொள்ளும் உறவில் இருக்கிறது. இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவிலும் சக மனிதர்களோடு நாம் கொண்டுள்ள உறவிலும் ஆன்மீகம் ஆழ்நிலையில் நிலைத்து நிற்கிறது என்பது தான் ஏறக்குறைய பொதுவான நிலைப்பாடாக இருக்கும். இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவு உண்மையானதாக இருப்பின் நம்மோடு வாழும் மனிதர்களோடு உள்ள உறவும் உண்மையானதாக இருக்க வேண்டும். இந்த இரண்டு உறவில் ஏதாவது ஒன்றில் குறைவு இருப்பின் அது உண்மையான ஆன்மீகமாக இருக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு மற்றவர்களை திசைப்படுத்தியதாக உள்ள ஆன்மீகம் தான் முழுமையாக ஆன்மீகமாகும். ஆன்மீகம் என்பது உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற நிலைகளைக் கொண்டது. எனவே நாம் இறைவனோடு கொண்டுள்ள உள்ளார்ந்த உறவானது வெளிப்புற செயல்கள்களால் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே தான் இயேசு கிறிஸ்து பரிசேயர்களையும் சதுசேயர்களையும் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லரைகளே என்று சாடுகின்றார். காரணம் அவர்களுடைய ஆன்மீக வாழ்வு சக மனிதர்களை திசைப்படுத்தியதாக? அமையவில்லை. அவர்கள் கடைப்பிடித்த ஆன்மீகத்திற்கும் வெளிப்புற செயல்பாடுகளுக்கும் பெருத்த முரண்பாடு இருந்தன மற்றும் சமூதாய மாற்றத்திற்கு வழிவகுக்கவில்லை. இதற்கு இணையாக சுவாமி விவேகானந்தர் இவ்வாறு கூறுகிறார், “ஆன்மீக விடுதலையை பற்றி மட்டும் கவனம் செலுத்திச் சமூதாய விடுதலை குறித்து கவனமற்றிருப்பது குறைபாடு.” எனவே இறைவனை நோக்கிய நம்முடைய ஆன்மீக பயணத்தில் அயலானை மறத்தல் என்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று. இதைத்தான் இயேசு கிறிஸ்து நல்ல சமாரியன் உவமையில் விளக்குகின்றார். ஆன்மீக காரியங்களில் தன்னை ஈடுபடுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் குருவும், லேவியரும் இறந்து கொண்டிருக்கும் சமாரியனுக்கு உதவாமல் செல்கின்றார்கள். இங்கும் பரிசேயர்களையும் சதுசேயர்களையும் மறைமுகமாக கடிந்து கொள்கின்றார். ஆனால் மற்றொரு சமாரியன் அவருக்கு உதவி செய்கின்றார். இங்கு நம்முடைய சமயக்கோட்பாடுகள், ஆன்மீக வழிமுறைகள் மூலம் யாருக்கு என்ன பயன்? தந்தை பெரியாரை நாம் ஒரு நாத்திகன்; என்று தான் வழக்கமாக நினைத்து பார்ப்போம். ஆனால் உண்மையில் அவர் ஒரு நாத்திகன் அல்ல. அன்று சமயங்களினால் தாழ்த்தப்பட்ட சமூதாயம் என்று பார்ப்பனர்களால் கருதப்பட்ட மக்களுக்கு அவர்கள் இழைத்த கொடுமைகளினால் கடவுளை மறந்து மனிதனை நினைத்துப்பார் என்று சொல்லி கேட்க்காததினால் கடவுள் இல்லை இல்லவே இல்லை. கடவுள் இருக்கிறார் என்று சொல்பவன் முட்டாள், அறிவிலி என்றெல்லாம் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்க்கின்றார். அன்று பார்ப்பனர்களின் வாழ்வு, ஆன்மீகம், சமயக் கருத்துக்கள் இவையாவும் சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவில்லை. அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படவில்லை. அவர்களுடைய ஆன்மீகம் என்ற வாழ்க்கை முறை மற்றவர்களின் நலனை திசைப்படுத்தியதாக அமையவில்லை. எனவே தான் தந்தை பெரியார் இவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கிறார். ஆன்மீகம் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே என்பதற்கு ஒரு சிறந்த எடுத்ததுக்காட்டு நமக்கெல்லாம் தெரிந்த கேள்விப்பட்ட புனித அன்னை தெரேசா. இவர் இறைவனோடு கொண்ட ஆன்மீக உறவு ஏழை, எளிய, அனாதைகள் மற்றும் கைவிடப்பட்டோர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்த செயலின் மூலம் வெளிப்பட்டது. ஒட்டுமொத்த கல்கத்தா சமூதாயமே முன்னேறியது, வாழ்வு பெற்றது. இதற்கு அடிப்படைக் காரணம் அவர் மேற்கொண்ட ஆன்மீகம். இறைவனோடும் மக்களோடும் கொண்ட உறவு. இது தான் முழுமையான, அர்த்தமுள்ள ஆன்மீகம். இதற்கு முரண்பாடாக வரலாற்றை சற்று அலசிபார்க்கம் போது சமயங்களை தழுவிய மக்களிடையே பல்வேறு சமூதாய சீர்கேடுகள் மக்களுக்கு இழைக்கப்பட்டதை பார்க்கலாம். இன்றைய கால சூழ்நிலையில் இந்த இடத்தில் எந்தக் கடவுள் கோவிலைக் கட்டுவதென்ற சண்டையில் பலர் வெட்டப்படுகின்றார்கள். ஆலயங்கள் இடிக்கப்படுகின்றன. மசூதிகள் தாக்கப்படுகின்றன. சிறுபான்மை சமயங்கள் சாகடிக்கப்படுகின்றன. தன்னுடைய சமயத்திற்கு எதிராக இருப்போரை வெட்டுவோம் என்ற குரல் ஒரு பக்கம். மதத்தின் பெயரில் குண்டுகள் பொது இடங்களில் வெடிக்கின்றன, பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். கர்ப்பிணி பெண்களின் வயிறு கிழிக்கப்படுகின்றன. இத்தகைய செயலை செய்பவர்களின் மதங்கள் எதை போதிக்கின்றன? எத்தகைய ஆன்மீகத்தை பின்பற்றுகிறார்கள்? இவர்களின் ஆன்மீகம் சமூதாயத்திற்கு உதவுகின்றதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கின்றது. சமூதாயத்தில் நம்முடைய செயல் மற்றவர்களை பாதிக்கின்றது என்பது நாமறிந்த உண்மை. எனவே நம்முடைய செயல்கள் மற்றவர்களை நேர்மறையாக பாதிக்க வேண்டும். எதிர்மறையாக பாதிக்கும்போது தான் அது குற்றமாக மாறுகிறது. எனவே நாம் பின்பற்றும் ஆன்மீகமும் மற்றவர்களை நேர்மறையாக பாதிக்க வேண்டும். அவ்வாறு பாதிக்கவில்லை என்றால் அந்த ஆன்மீகத்தில் எந்த ஒரு பயனுமில்லை. ஆன்மீகம் மனித மற்றும் சமூதாய மாற்றத்திற்கு உதவவேண்டும். ஆன்மீகம் தனி மனிதரை மட்டுமன்று குழுக்களை, சமுதாயத்தை மாற்றவும் உயர்த்தவும் உதவ வேண்டும். சகாய ராஜ் ளயபயலயஅயசயை;பஅயடை.உழஅ Pமு யனெ புழன நண்பர்கள் பலரோடு சமீபத்தில் Pமு என்ற ஹிந்தி திரைப்படம் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, வேற்று கிரக வாசியான கதாநாயகள் பூமிக்கு பயணம் மேற்கொள்கிறான். அவன் இருப்பை அறிந்து கொள்வதற்கு உதவியாகவும், மீண்டும் அவன் திரும்பிச் செல்ல நினைத்தால் அவனை அடையாளம் கண்டு கொள்வதற்காகவும் ஒர் விலையுயர்ந்த கல்லை கழுத்திலே அணிந்திருக்கின்றான். ஒருவர் அதை களவாடிச்சென்றுவிடுகிறார். இழந்து போன பொருளை தேடி அலையும் கதாநாயகன். இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ தெய்வங்களின் உதவியை நாடி, தேடி எவ்வாறு மீண்டும் தன் கிரகத்தை அடைகின்றான் என்பதே கதை. என்னை மிகவும் பாதித்த நிகழ்வு யாதெனில் இழந்த பொருளை அடைவதற்காக அவன் படும் கஸ்டங்கள் எண்ணிலடங்கா. யாதும் அறியாத அவன், மதங்கள், தெய்வங்கள், ஆன்மீகவாதிகள் என்று அலைகழிக்கப்படுதலும், அதில் உள்ள ஏமாற்றுத்தனங்களையும், பித்தலாட்டங்களையும் அறிந்ததுமே எனக்குள் கடவுள் எங்கே இருக்கிறார்? யார் கடவுளாக இருக்க முடியும்? என்ற சிந்தனைகளே ஏழும்பின. உலகமானது நிலம், நீர், காற்று, வான்வெளி, சூரியன், தாவரங்கள், பறவைகள, விலங்குகள் மற்றும் மனிதன் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு வலைப்பின்னல் போன்றது. பார்க்கும் திசையெல்லாம் இறைச்சாயல் தெரிகிறதா? இல்லையேல், உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே எனது இக்கட்டுரையின் ஆவல். நவீனத்துவ காலத்தில், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியல் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகம். தனிமனித திறமைகளைக் கொண்டிருக்கும் மனிதன் இப்புவியில் இருக்கும் வளங்களைக் கொண்டு, அன்றாடத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைந்து வருகிறான். 21-ம் நூற்றாண்டில், தொலைதொடர்புசாதனங்களின் குடும்பங்களில் தொலைக்காட்சிபெட்டியின் நெடுந்தொடர்களிலும், இணைய தளத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும், இன்றைய நவீன கால மனித இனம் “கடவுள்” என்ற வார்த்தையை அவர்கள் உபயோகிக்கும் னுiஉவழையெசல–யில் இருந்து நீக்கி விட்டார்கள் என்று அச்சம் ஏற்படுகின்றது. எது எப்படியோ, நல்லவர்கள் சிலர் இவ்வுலகில் இருப்பதால் தான் மழை பெய்கிறது என்று கொல்லுவது போல, மதங்கள் பலவாயினும், தெய்வங்கள் பலவாயினும், அவரவர் நிலைப்பாடுகளுக்கு ஏற்றார்போல வாழ்க்கை பயணத்தை நகர்த்தி கொண்டிருக்கும் நண்பர்களுக்கு சில வேண்டுகோள். மதக் கோட்பாடுகளுக்கு அப்பால் பிரபஞ்சம் கடவுளின் இருப்பு. நம் அனைவரையும் படைத்தவர் கடவுள் என்பதை மறந்து விட்டு, மதங்களுக்கு மத்தியில் பிளவுகளும் பிரிவினைகளும் தகர்த்தெறிய வேண்டும். நாம் எம்மதத்தை தழுவியவராக இருப்பினும், படைத்த கடவுள்மீது கொண்ட நம்பிக்கையே நம்மை வலுப்பெறச் செய்யும். அனைத்து மதங்களிலும் உள்ள நல்ல, அரிய கருத்துகளை உள்வாங்கிக்கொள்ள தடைபோடக்கூடாது. மாற்றாந்தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்பதுபோல, மதங்களுக்குள் இருக்கும் பன்மைத் தன்மைகளைப் பெரிதுபடுத்தாமல், மற்றவர்களிடமும் நிறையுண்டு என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். பிறசமயத்தை மதிக்கும் குணம் நமது னுNயு-வில் இருக்க வேண்டும். பொது வளர்ச்சி முன்வருதல் கடவுள் கொடுத்த ஒரு அரிய கொடை வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் மதங்களையும் தாண்டி, சமுதாயத்தில், அக்கம் பக்கத்தில், அடுத்தவர்களுக்குச் சொல்லும் ஆறுதல்களில், உதவிதேவை என அறிந்து உரிய நேரத்தில் செய்யும் உதவிகளில் சாதி, மதம், பேதம் கடந்து பாசப்பகிர்வுகளில் இறையை உணர முடியும். அடிப்படை உரிமைகள் இழந்து, நீதிகள் மறுக்கப்பட்டு, சாதியால், மதத்தால் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு உழைக்கும் போது, சாதரண மக்களாகிய நாம் கடவுள்களாக அவர்களுக்கு காட்சியளிப்போம் என்பதில் ஐயமில்லை. மனிதம் போற்றும் புனிதனாக அல்ல, மாறாக, மனிதம் தேடும் மனிதனாக வாழ இந்த நூற்றாண்டு அழைப்பு. ஏழைகளுக்கு உதவுவதில் வாழ்க்கையை தொலைப்போமா! “வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பாடி விட்டுச் சென்ற வரிகள் நம் மனதைக் கீறட்டும் பூமியில் அனைத்துப் படைப்புகளிலும் கடவுளைக் காண்போம். உயிர்களை மதித்து போற்றுவோம். சத்தி ளயவாலையளனடி;பஅயடை.உழஅ (இறையியல் கட்டுரைகள்) இறையாட்சி மதிப்பீடுகள் இன்றையச் சூழலில் மக்களின் வாழ்வுநிலைக்கு பெரிதும் உதவியாக இருப்பது உலக மதிப்பீடுகளா? இறையாட்சி மதிப்பீடுகளா? என்றத் தலைப்பில் கருத்தாழமிக்க, சிந்தனை தெளிவோடு கூடிய பட்டிமன்றம் ஒன்றை நடத்தினால் குடிமக்களாகிய நாம் எந்த மதிப்பீடுகளை மையப்படுத்தி தீர்ப்பு வழங்குவோம்? நிச்சயம் இது ஒரு கடினமான தீர்ப்பாகத் தான் நமக்கு அமையும். ஏனென்றால் இரு மதிப்பீடுகளுமே இந்த 21ம் நூற்றாண்டில் வாழும் நமக்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பதை நம்மால் உணரமுடியும். அதிலும் குறிப்பாக, இன்று நாம் வாழும் சமூகம் உலகமயமாக்கலால் கவரப்பட்ட, தாக்கப்பட்ட ஒரு சமூகம். பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும், அறிவியலிலும், மதச்சார்பிலும், தொலைத் தொடர்புச் சாதனங்களிலும் வளர்ந்து மூழ்கிப்போன ஒரு சமூகம். நாம் நினைத்த காரியங்கள், திட்டமிட்ட பணிகள் என எல்லாமே நம் விருப்பம்போல் நடக்கக்கூடிய ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்கும் எதிலும் பரபரப்பாக, விரைவாக உயரக்கூடிய ஒரு சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். என்னதான் இவ்வுலகமும், இவ்வுலகம் சார்ந்தக்கூறுகளும் நம்மை ஆட்கொண்டாலும் இறுதியாக நம் வாழ்வை தீர்மானிப்பது இறையாட்சியின் மதிப்பீடுகளே. இறுதிநாளில் இறையரசுக்கும் அதனின் விழுமியங்களுக்கும் நாம் எவ்வாறு சாட்சிபகர்ந்தோம் என்பதைப் பொருட்டே நமது இறுதித் தீர்ப்பு இருக்கும் என்கிற கிறிஸ்தவ மரபை நம்மால் மறுக்க முடியாது. அதற்கேற்றாற்போல், திருவிவிலியத்திலும் பல்வேறு விதமான இறையாட்சி மதிப்பீடுகள் புதைந்து இருப்பதை நம்மால் உணர முடியும். நாம் எப்பொழுது இந்த புதையல்களை எல்லாம் தோண்டி எடுக்கிறோமோ அப்பொழுதுதான் உலக மதிப்பீடுகளுக்கும், இறையாட்சி மதிப்பீடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை நம்மால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும். இப்புதையல்களைத் தோண்டி எடுக்க நம் சமூகம் நமக்கு வழிவகுக்கிறதா? அண்மைக் காலமாக கிறிஸ்தவர்களுக்கும் பிற மதத்தினருக்கும் இழைக்கப்படும் கொடுமைகளையும், தாக்குதல்களையும் பார்க்கின்ற பொழுது இல்லை என்று தான் நம்மால் பதிலளிக்க முடியும். இம்மாதிரியான தாக்குதல்களும், கொடுமைகளும் இறையாட்சி மதிப்பீடுகளை தரைமட்டமாக்கி உலக மதிப்பீடுகளை நிலைநாட்டுவதற்கு வழிவகுக்கக் கூடிய ஒரு கொள்கையாக அமைகிறது என்றால் அதை நாம் மறுக்க முடியாது. மதத்தின் பெயராலும், உலகமயமாக்கலின் தாக்கத்தாலும், வன்முறைகளையும் மனஉளைச்சல்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மதப்பிசாசுக்கள் மத்தியில் இறையாட்சி மதிப்பீடுகளை நிலைநாட்டுவது கடினம்தான். இருந்தாலும் தோல்வியடையாமல், வெற்றி வீரர்களாய் இறையாட்சி மதிப்பீடுகளை நாம் வாழும் இச்சமூகத்தில் விதைக்க நாம் அனைவருமே பாடுபட வேண்டும். இது நமது தலையாய கடமையும் கூட. ஆனால் இதற்கு முதலில் நாம் இறையாட்சி மதிப்பீடுகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அவைகள் எங்கு இருக்கின்றன என்பதை நாம் தேடி கண்டுபிடித்து, அவைகளை நமது வாழ்வில் கடைப்பிடித்து நல்வாழ்வு வாழ முயல வேண்டும். உலகமதிப்பீடுகள் என்று சொல்லும் பொழுது வெற்றி (பொருளளவில், அதிகாரத்தில், கௌரவத்தில்), தற்காப்பு, தன்னலம், பணம், செழுமையான வாழ்வு என உலகம் சார்ந்த நிலைகளை நாம் குறிப்பிடலாம். இறையாட்சி மதிப்பீடுகள் என்கிற பொழுது கடவுளோடும், அவரது ஒரே மகனான இயேசு கிறிஸ்துவோடும் நாம் கொண்டிருக்கும் உறவுமுறையைக் குறிப்பது. இந்த உறவுமுறை அவர்கள் விட்டுச் சென்ற இறையாட்சியின் விழுமியங்களை நமது வாழ்வில் கடைபிடிக்கும் பொழுது வலுவடைவதைக் குறிக்கிறது. திருவிவிலியத்தில் தொடக்கநூல் முதல் திருவெளிப்பாடு வரையுள்ள அனைத்து நூற்களிலும் இந்த இறையாட்சி விழுமியங்களை நாம் காணலாம். ஒரு சில விழுமியங்களை இங்கே உதாரணத்திற்காக குறிப்பிடுகின்றேன்: மனித வாழ்வை மதித்தல் (விப 20:13), உண்மைக்குச் சாட்சியம் பகிர்தல் (விப 23:1), பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் (எபே 6:1), முதியோர்களை மதித்தல் (லேவி 19:32), அயலாரை அன்பு செய்தல் (மத் 22:39; யோவான் 13:35; கலா 5:14), உடலுறவில் தூய்மை (1கொரி 6:8; யாக் 2:11; விப 20:16), விருந்தோம்புதல் (எபி 13:2; 1பேதுரு 4:9; லேவி 19:34), அமைதியான வாழ்வு (உரோ 12:18; எபி 12:14), அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிதல் (உரோ 13:1; 1பேதுரு 2:13), தாழ்ச்சி மனப்பான்மை (மத் 18:4), தாராளகுணம் (நீமொ 11:24), தியாகம் (உரோ 12:1), தன்னலமின்மை (பிலிப் 1:17), இன்னும் பல. இதுபோன்று இன்னும் ஏராளமான மதிப்பீடுகள் திருவிவிலியத்தில் புதைந்து கிடப்பதை நாம் அறிய வேண்டும் உணர வேண்டும். அறிவதோடும், உணர்வதோடும் மட்டும் நின்றுவிடாமல் இம்மதிப்பீடுகளை நமது அன்றாட வாழ்வில் அனுபவித்து, கடைப்பிடித்து நம்மையே முழுவதுமாக இவற்றிற்கு அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு தங்களது வாழ்வை இறையாட்சி மதிப்பீடுகளுக்கேற்ப வாழ்ந்து மரித்தவர்கள் பலர் நம் சமூகத்தில் இருந்திருப்பதை நம்மால் உணர முடியும். உதாரணத்திற்கு அன்னை தெரசா, காந்தியடிகள், தூய இரண்டாம் ஜான் பால், தூய தேவசகாயம் பிள்ளை மற்றும் சமூக வெளிச்சத்திற்கு வராமல் மரித்தவர்கள் என பலபேர் இம்மதிப்பீடுகளை வாழ்வாக்கிச் சென்றிருக்கின்றார்கள். இவர்களைப் போல நாமும் அர்த்தமுள்ள, இறையாட்சி மதிப்பீடுகளுக்குகந்த வாழ்வு வாழ முன்வர வேண்டும். வளர்ந்து வரும் இந்நவீன உலகில் இது சாத்தியமா என்றால் சாத்தியமே என்று தான் நான் கூறுவேன். உலகமதிப்பீடுகளை நமது வாழ்வாக்கும் பொழுது இறையாட்சி மதிப்பீடுகளை நம்மால் வாழமுடியாதா என்ன? நிச்சயம் முடியும். அதற்கான முயற்சிகளையும், வழிமுறைகளையும் நாம் தான் எடுக்க வேண்டும். நம்மால் முயன்ற சிறுசிறு வழிகளில், நமது குடும்பங்களில், நாம் பணி செய்யும் தளங்களில், நமது உறவுமுறைகளில், நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களில், நமது சமூகத்தில், நமது திருஅவையில், நமது கல்வி நிறுவனங்களில் என நாம் ஈடுபடும் அனைத்திலும் இந்த இறையாட்சி மதிப்பீடுகளைக் கடைப்பிடிக்கும் பொழுது நிச்சயமாக நல்விதைகளைச் சமூகத்திலும், திருஅவையிலும் நம்மால் விதைக்க முடியும். எனவே, புதைந்திருக்கும் புதையலைத் தோண்டி எடுக்க, சிலந்தியாய் வீறுகொண்டெழுந்து, உலகமதிப்பீடுகளைக் களைந்தெறிந்து, இறையாட்சி மதிப்பீடுகளை நமதாக்கிட முயல்வோம் நம்மையே அர்ப்பணிப்போம். ஜேம்ஸ் சுந்தர் ளரசயளனடி;பஅயடை.உழஅ இறையுணர்வுள்ள பிரபஞ்சமும் மனிதமும் கிரேக்க மெய்யியல் அறிஞர் ஹெராகிளிட்டஸ் “எவரும் இருமுறை ஒரே ஆற்று நீரில் காலெடுத்து வைக்க முடியாது” என்று மாற்றத்தைப் பற்றி கூறியிருக்கிறார். அவருடைய கூற்றிற்கேற்ப உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் இன்று நம்முடைய வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. ஏன் நமது இந்த நூற்றாண்டு வளர்ச்சியின் எல்லையை நோக்கி வேகமாக பயணிக்கிறது என்பதற்குக் கூட மாற்றம் தான் காரணம். இந்த வளர்ச்சியின் காரணமாக நம் உலகம் பலவகையான மாற்றங்களுடன் ஒவ்வொரு நாளும் புதிய பிறப்பை எடுத்துக்கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கையின் எண்ணங்களில,; சிந்தனையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படுகிறது, அவன் அவனுடைய அறிவுக் கூர்மையால் அவன் பயன்படுத்தும் தொழில் நுட்பகருவிகள் ஒவ்வொரு நாளும் புதிய அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கிறது. மனிதன் தன்னுள் இருக்கும் அறிவுத் திறமையால் அனைத்தையும் அவனுக்கடியில், அவனுடைய பயன்பாட்டிற்காக மட்டும் வைக்க விரும்புகிறான். அவனுடைய அறிவுக் கூர்மை அவனை சந்திரனுக்கும் மேலே எடுத்துச் சென்றுவிட்டது. மனிதன் தன்னுடைய அறிவுக்கு அடிமையாகி, மனித தன்மையை இழந்து வாழ்கிறான். இதனால் தான் மனிதனோடு கூட அவன் வாழும் இந்த பூமி, இந்த உலகம், இயற்கை எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது. இயற்;கையில் ஏற்படும் மாற்றத்தை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்திருக்கிறான். ஆனால் அவற்றின் விளைவுகளை இப்பொழுது தான் சிறிது சிறிதாக அனுபவிக்க ஆரம்பிக்கிறான். மனிதன் இன்று அவனையும், இயற்கையையும், அவனைப் படைத்த கடவுளையும் பிரித்து, தனித்தனியாக, பாகுபடுத்தி, தனக்கும் இவற்றிற்கும் இடையே எந்த சம்மந்தமும், உறவும் இல்லாதது போல் வாழ்கிறான். இயற்கையையும் இறைவனையும் தன்னுடைய வாழ்வில் இருந்து பிரித்து வைத்து வாழ்கிறான். இப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த உலகத்தை மாற்ற நாம் முதலில் நம்மை, நம்முடைய சொல், செயல், எண்ணம், சிந்தனையை மாற்ற வேண்டும். நாம் வாழும் இடம், உலகம் இறையணர்வு நிறைந்த பிரபஞ்சம் என்ற எண்ணம், உணர்வு நம்மில் வரவேண்டும். இந்த இறையுணர்வு நம்மையும், நாம் வாழும் வாழ்க்கையையும் மாற்றி ஒரு புதிய உலகம் படைக்க உதவும் என்று மெய்யியல் மற்றும் இறையியல் அறிஞர் ரெய்மண்ட் பனிக்கர், கிறித்துவம், இந்து மற்றும் புத்த மதத்தின் அடிப்படை கோட்பாடுகளைச் சேர்த்து நமக்கு எடுத்து காட்டியிருக்கிறார். நாம் இறையுணர்வு கூடிய உலகப் பார்வையை உருவாக்க முதலில் நாம் ஏற்படுத்தியிருக்கும் பாகுபாடுகள் உடல்-ஆன்மா, உலகம்-கடவுள்-மனிதன், உலகம் சார்ந்தவை என அனைத்தையும் களைய வேண்டும். உலகம் என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கியது, இவற்றில் பாகுபாடுகள் இல்லை, உறவு இருக்கிறது என்பதை உணரவேண்டும். இதற்கு முதலாவதாக நான் மனிதன், உலகம் மனிதனுக்காகதான் இருக்கிறது, நாம் தான் உலகத்தின் அரசன், என்று உலகை ஆளுதல், மற்றும் ஆட்சி செலுத்தும் மனநிலையைக் களைய வேண்டும். இந்த மனநிலையால் தான் மனிதன் ஆராய்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய பொது அறிவை வளர்க்க துடிக்கிறான். இந்த மனநிலை நம்மை பிரபஞ்சம் குறிப்பாக இயற்கையில் மறைந்திருக்கும் மறைபொருளைக் காணாத, உணராத குருடர்களாக, மனக்கிளர்ச்சியற்றவர்களாக மாற்றி இருக்கிறது. இதனால் இறையுணர்வுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள உறவை நம்மால் உணர முடியவில்லை. இந்நிலை மாற நாம் நம்மை உலகத்தில் ஒரு நபராக கருத வேண்டும், அதாவது நம்மை பெற்று வளர்த்தெடுக்கும் நம் அன்னையாக கருத வேண்டும், உலகத்திற்கும் நமக்கும் உள்ள உறவை மேம்படுத்த வேண்டும், இந்த உறவை இழப்பது என்றால் நாம் நம்மையே, நம்முடைய அடையாளத்தை, முற்றொருமை உறவை இழப்பதற்கு சமம். நாம் நம் உலகை குறிப்பாக இயற்கை அன்னையை நம்முடன் உறவாட, உரையாட அனுமதித்தால் ஞானத்தை வளர்க்க முடியும். உலகம் இல்லாமல் மனிதர்கள் இல்லை. நம்முடைய மனிதத் தன்மையை நாம் இவ்வுலகத்தோடு கொண்டுள்ள உறவால் தான் வளர்க்க முடியும் அதாவது உலகமே நம்மை மனிதர்களாக மாற்றுகிறது. அதே போல் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் கடவுளுடையதே. இந்த உலகம், பொருட்கள், உயிரினங்கள் அனைத்தும் கடவுள் இருக்கிறார் என்பதன் அடையாளம். ஒவ்வொன்றும் கடவுள் இருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. எனவே மனித வாழ்க்கையின் அர்த்தம் இந்த இறைவனையும், இறைபிரசன்னமாயிருக்கும் இவ்வுலகத்தையும் நம்முடைய வாழ்வில் இணைப்பதில் தான் இருக்கிறது. இரண்டாவதாக எந்த ஒரு மனிதனும் தனியாக மற்றொரு மனிதனைச் சாராமல், சார்ந்து வாழாமல் இருக்க இயலாது. அயலான் அற்ற, மற்ற மனிதர்களின் உறவில்லா, உதவியில்லா வாழ்க்கையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க இயலாது. நாம் மற்றவர்களின் உறவிலும், உதவியிலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வாழும் இடம் இவை அனைத்திலும் மற்றவர்களின் பங்கு உள்ளது. மனிதர்களாகிய நாம் உறவினர்கள். அதே போல் எந்த ஒரு கலாச்சாரமோ, நாடோ தன்னைத் தனித்துவமிக்க நாடு அல்லது கலாச்சாரம் என்று கருத இயலாது. இவை அனைத்தும் மற்ற நாட்டையோ கலாச்சாரத்தையோ சாராமல் இருக்க முடியாது. ஒரு கலாச்சாரம் மற்றொன்றை புதுப்பொலிவு அடைய உதவியாய், உறுதுணையாய் இருக்கிறது. அதேபோல் கடவுள் ஆகாயத்தில் இருப்பவர் என்றும், மனிதன் பூமியில் வாழ்கிறவன் என்றும், இவ்வுலகம் பூமி மற்றும் பூமிக்கு அடியில் இருப்பவை என்றும் பாகுபடுத்தி, பிரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் ஒன்றுதான். நாமும் இந்த சீர்பிரமாணத்தின் ஒருவர் என்பதை நாம் நம்முடைய வாழ்க்கையை உணர்ந்து நிகழ்காலத்தில் வாழும் போது உணர்கிறோம், மேலும் இவற்றிற்கிடையே உள்ள அந்த அடிப்படையான உறவை, ஒற்றுமையை உணர முடிகிறது. இப்படி வாழும் போது நாம் இறையுணர்வுள்ள பிரபஞ்சத்தில் உள்ள ஒரு நபராக வாழலாம். அதாவது நாம் இந்த இறை குடிகொண்டுள்ள உலகத்தில் வாழும் மக்கள் என்பதை அனுபவித்து, இறையுணர்வுடன் கூடிய வாழ்க்கையை வாழ முடியும். செல்வ குமார் ளநடஎயமரஅயசளனடி;பஅயடை.உழஅ துறவறத்தின் தனித்தன்மையும் அதன் சவால்களும் துறவறத்தார் தம்முடைய அர்ப்பண வாழ்வில் முழுமை கண்டிட, நம்முடைய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, இறைஇயேசு கொண்டு வந்த இறையாட்சியின் மதிப்பீடுகளை இம்மண்ணில் நிலைநாட்ட, நம் தாய் திருச்சபையின் வளர்ச்சிக்கு நம்முடைய துறவறத்தாரின் பணி மேன்மேலும் சிறக்க, நம்முடைய தாய்திருச்சபையை வழிநடத்தும் நம்திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டை துறவறத்தாரின் ஆண்டாக அறிவித்து அனைவரையும் இவர்களின் வழியாக இவ்வுலகை விழித்தெழச் செய்து இருக்கின்றார். துறவறம் என்பது முற்றிலும் துறந்து இறைவனுக்கு ஏற்ற வாழ்வு வாழ்வது. இம்மண்ணில் இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, சகோதரத்துவம், சமுத்துவத்தை நிலைநாட்டுவது. இறைவனை மட்டுமே பற்றிக் கொள்வது. ஏழ்மை, கற்பு, கீழ்படிதல் போன்ற வார்த்தைபாடுகளை வாழ்வாக்குவது. நம்மையே பிறருக்காக அர்ப்பணிப்பது. இவ்வுலக வாழ்வை இறைவனுக்கு ஏற்ற வாழ்வாக மாற்றுவது. இந்த உண்மைகளை நிலைநாட்ட வேண்டும் என்றால் துறவிகள்; அனைத்து சவால்களையும் சந்தித்து, அவற்றை வெற்றிக் கொண்டு, மக்கள் மத்தியில் இறைவனின் அன்பையும் மற்றும் பகிர்வையும் நிலைநாட்ட வேண்டும். இம்மறை உண்மைகளை நிலைநாட்ட வேண்டுமென்றால் துறவிகளிடமிருந்து எதிர்ப்பார்ப்பது என்ன? துறவிகளின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? தற்போதய சமுதாயம் நம்மிடம் இருந்து கேட்பது என்ன? நம்முடைய இறையழைத்தலுக்கு நாம் எவ்வாறு செவிமடுக்க போகிறோம், சமுதாயத்தின் விளிம்புகளுக்குச் சென்றா? நற்செய்தியை வாழ்ந்து காட்டுவதின் மூலமாகவா? இறை உண்மைகளை ஆழமாக எடுத்துரைக்கும் இறைவாக்கினராகவா? இன்று நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? நமது அடிப்படை நோக்கம் என்ன? கிறித்துவுக்கு சாட்சியாக வாழும் வாழ்வு துறவற வாழ்க்கை என்பது கிறித்;துவுக்குச் சாட்சியாக வாழும் வாழ்வு. கிறிஸ்துவுக்காக நம்முடைய வாழ்வை முழுமையாக அhப்பணிப்பது. அவருக்காக மரிப்பது. தன் சுயநலத்தை மறந்து பிறர்நலத்தில் அக்கறை கொண்டு மக்களுக்;காக வாழுகின்ற வாழ்க்கையாக வாழ்வதே சால சிறந்தது. தியாக நிறைந்த உள்ளத்தைக் கொண்டும் மற்றும் மக்களின் நலனில் அக்கறை கொண்டும் மனித நல மேம்பாட்டிற்காக தியாக செய்கின்ற வாழ்க்கை இந்தத் துறவறம். நம்முடைய சாட்சியம் நிறைந்த வாழ்வு வாழ்விற்கு ஒரு அர்த்தத்தைச் சேர்க்கின்றோம். இந்த அர்ப்பண வாழ்வானது பிறரைக் கவர்ந்து திருச்சபையின் வளர்ச்சிக்கு ஒரு வித்தாக இருக்குமாயின் அது ஒரு சிறந்தபயன். ஆகவே நம்முடைய திருச்சபையானது மக்கள் கவரும் வண்ணமாக மற்றும் இறையேசு விட்டுசென்ற அமைதியை நிலைநாட்டும் கருவியாக இருக்க வேண்டும். உலகை எழுப்பவேண்டும் எவ்வாறு நம்முடைய வாழ்வும் மற்றும் செயல்களும் பிறருக்குச் சாட்சியம் பகரும் வண்ணமாக இருக்கும் பொழுது. துறவறத்தார் இறையரசின் மதிப்பீடுகளைப் பற்றி பேசவும் மற்றும் இம்மண்ணில் இப்பொழுதே நிலைநாட்டவும் பாடுபட வேண்டும். நாம் எவ்வாறு முற்றிலும் துறந்து இறைவனைப் பின்பற்ற முடியும்? இறைவனை முற்றிலுமாக பின்பற்றுதல் துறவிகளுக்கு மட்டும் பொருத்தமல்ல, அனைவரிடத்திலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் துறவிகளுக்கு இது தனிப்பட்ட, முக்கியமான, சிறப்பான அழைத்தலாக கருதப்படுகிறது. இத்தகைய சாட்சிய வாழ்வு தான் துறவிகளிடமிருந்து எதிர்பார்க்கபடுகிறது. இவ்வாறு நம்முடைய சாட்சிய வாழ்வின் வழியாக நாம் உலகை எழுப்ப முடியும். இறையழைத்தல் அனைவருக்குமே இறைவன் ஒருகுறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திலிருந்து இறைப்பணிசெய்ய அழைக்கவில்லை. மாறாக அனைத்து கலாச்சாரத்திலில் வாழும் மக்களையும் அழைக்கிறார். இது கடவுளுடைய திட்டம். அவ்வாறு இருக்க ஏன் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து அதிக இறையழைத்தல் பெருகிவருகிறது என்று கேள்விகேட்கலாம். ஏன் இறையழைத்தல் பெருகாமல் இருக்கும் இடத்திற்கு இறைப்பணியாற்ற மறைப்பணியாளர்களாக இவர்கள் செல்ல வேண்டும். இவ்வாறு பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழலாம். மிகவும் குறிப்பாக நம்முடைய தாய்திருச்சபையில், ஒருசில இடங்களில் திருச்சபையின் வளர்ச்சியைக் காணமுடிகிறது. முற்காலத்தில் எவ்வித வளர்ச்சியையும் இவ்விடங்களில் இருக்கும் திருச்சபையிலிருந்து காண முடியவில்லை. ஆனால் இப்பொழுது அதன் வளர்ச்சியை காணமுடிகிறது. இதற்குக் காரணம், குறிக்கோளையும், எண்ணத்தையும் இக்கலாச்சாரத்திற்கு ஏற்றார்போல் மாற்றி அமைக்கும் பொழுதும் இக்கலாச்சாரத்தை ஏற்றார்போல் மாற்றி அமைக்கும் பொழுதும், இக்கலாச்சாரத்தை அடிப்பiயாக வைத்து நாம் பார்க்கின்ற பொழுது நாம் மாற்றங்கள் காணலாம். திருச்சபையும் இறையரசின் மதிப்பீடுகளை இம்மண்ணில் வாழ்வாக்குகிறது. புனித லொயாலா இஞ்ஞாசியார் சொல்வார்! இக்குறிக்கோளை இடத்திற்கும், நேரத்திற்கு, நபருக்கு எற்றார்போல் வாழ்வாக்க வேண்டும். ஏழைகளை அடிப்படையாக கொண்டிருத்தல் மிகவும் அவசியம். அடிப்படை வாதங்களை தவிர்க்கவும்; மற்றும் ஏழைகளின் மத்தியிலிருந்து நம்முடைய வரலாற்றில் மாற்றங்கள் நிழந்து இருக்குமாயின், உண்மை அனுபவங்களானது சமுதாயத்தின் பின்தங்கியவர்களின் மத்தியல், சமுதாயத்தில் ஏற்கபடாதவர்களின் மத்தியில், ஏழை, எளிய மக்களின் நிலையில் இருந்து தான் சமுதாய பிரச்சனைகளை நாம் அனைவரும் உணரந்;திருக்க முடிகிறது. இப்படி சமுதாயம் மாறும்பொழுது சமுதாயத்தில், ஏன் இவ்வரலாற்றில் கூட நாம் மாற்றம் காணலாம். இவ்வரலாற்று மாற்றத்தை நாம் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களின் மத்தியிலிருந்து நாம் உணர முடியாது. இச்சமுதாய சூழ்நிலையை ஏழைகளின் மத்தியில் தான் நாம் கண்டுணர முடியும். இத்தகைய பின்தங்கிய சூழ்நிலையானது நம்மையே அடிப்படையான கேள்விகளை எழுப்ப தூண்டுகிறது. இத்தகைய பின்தங்கிய சூழ்நிலையானது புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இவ்ஏழை மக்களின் கண்ணோட்டத்தில் நாம் இச்சமுதாயத்தைப் பார்க்க வேணடியது மிகவும் அவசியமானது. இத்தகைய சூழ்நிலையை நாம் உண்மையாக புரிந்து கொள்ளவேண்டுமென்றால், நம்முடைய எண்ணங்களும், வழிமுறைகளும் இவ்ஏழை மக்களின் நிலைக்கு முற்றிலுமாக திசைதிருப்ப வேண்டும். நாம் உயர்ந்த நிலையிலிருந்து ஏழை மக்கள் வாழும் சூழ்நிலைக்கு நாம் நகர்ந்து செல்ல வேண்டும். இவ்ஏழை மக்களின் நிலையிலிருந்து தான் நாம் சமுதாயத்தைச் சரியாக புரிந்து கொள்ள முடியும் மற்றும் இவ்வரலாற்றில் நாம் மாற்றங்கள் கொணரமுடியும். குழசஅயவழைn ளை ய றுழசம ழக யுசவஇ ழேவ ய Pழடiஉந யுஉவழைn இறைப்பணியாற்றும் இறைப்பணியாளர்களை உருவாக்குவது திருச்சபையின் முக்கியபணியாகும். அறிவாற்றல், ஆன்மீக ஆற்றல், குழு ஆற்றல், மக்கள் பணி என்ற நான்கு முக்கியமான தூண்களை அடிப்படையாக கொண்டது இவ்உருவாக்கப்பணி. இந்த நான்கு நிலைகளை ஒருமுகப்படுத்திய வண்ணமாக உருவாக்க பணி அமைந்து இருத்தல் மிகவும் அவசியம். தொடக்கக்கால இறைப்பணி உருவாக்கத்திலிருந்து இறுதிவரை இந்த நான்கு நிலைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்க பணி அமைய வேண்டும். இந்த நான்கு நிலைகளும் பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உருவாக்கப்பணி ஒரு சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இன்றைய கலாச்சாரம் அதிக தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது மிகவும் குறிப்பாக இறைப்பணியாளர்களிடம். ஒவ்வொரு கலாச்சாரம் ஒவ்வொரு வழிமுறைகளை கொண்டுள்ளது. இக்கலாச்சாரம் (ஐnஉரடவரசயவழைn) நம்மை ஒரு சிறந்த நபர்களாக முக்கியமாக சமுதாயத்தில் மாற்றங்களை (வளர்ச்சி) ஏற்படுத்துவர்களை உருவாக்க உருவாக்கப்பணியில் திருச்சபை ஈடுபடுகிறது. எப்படிப்பட்ட பிரச்சனையும் நாம் உரையாடல்களின் மூலமாக நாம் வெற்றியைக் காணமுடியும். இவ்வுரையாடல் பயத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்ககூடாது. மாறாக உண்மையான உரையாடல்களாக அமையும் போது தான் நல்ல உருவாக்கப்பணி அமைகிறது. உருவாக்கும் பணியானது ஒரு மிக சிறந்த கலை, போலிஸ் பயிற்சி தருவது போன்றது அல்ல. இறைப்பணியாளர்களின் உள்ளங்கள் உருவாக்க வேண்டும். இவ்வுருவாக்கப் பணியானது ஒரு தனிப்பட்ட நபரின் உருவாக்கம் அனைத்து மக்களை இறைவிசுவாசத்தில் வளரச் செய்ய உதவும் உண்மையாக அமைய இத்தனிப்பட்ட இறைப்பணியாளர்களிடம் வழியாக நடந்தேறிய வேண்டும். இறைப்பணியாளர்கள் இறைமக்களை இறைவனின் அன்பிலும் அரவணைப்பிலும் வளரச்செய்ய உதவும் கருவிகளாக செயல்பட வேண்டும். சாட்சிய வாழ்வுக்கு எடுத்துக்காட்டு குழுமவாழ்வு குழுமவாழ்க்கையாக வாழும் சாட்சிய வாழ்வே துறவறத்தார்களின் எடுத்துக்காட்டான வாழ்வு. இக்குழுமவாழ்வே சிறந்த முறையில் நற்செய்தியை அறிவிக்கும் பணியாகும். நாம் எவ்வாறு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு சகோதரத்துவ வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நாம் எவ்வாறு குழும வாழ்வையும், நற்செய்தி பணியை ஒரு பொருள் நிறைந்த நிலையில் நிலைப்படுத்துவது? நாம் எவ்வாறு நம்முடைய சுயநலத்தோடு போராடுவது? எப்படிபட்ட கடினமான சூழ்நிலையிலும் நாம் சகோதர மனப்பான்மையோடு வாழ்வது? நியாத்தையும் மற்றும் இரக்கத்தையும் கடினமான சூழ்நிலையிலும் ஒன்று சேர்த்து பார்ப்பது எவ்வாறு? ஓற்றுமையாக வாழும் வாழ்க்கையானது, பிறருக்கு முன்மாதரியான வாழ்க்கையாக அமைகிறது. ஒற்றுமையில்லையனில் பிறரை அழிக்க வல்ல சக்தியை கொண்டுள்ளது. அர்ப்பண வாழ்வையே அழித்து விடக் கூடியது எப்பொழுது இந்த குழும வாழ்க்கைக்கு சோதனை வருகின்றபோது. புனித ஜான் பெர்க்மான்ஸ் சொல்வார், அவருடைய மிகப்பெரிய பிரச்;சனையானது குழும வாழ்க்கையாக வாழ்வதுதான். குழுமமாக வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒன்று, ஆனால் அவ்வாறு வாழவில்லையெனில், அது எந்த வித பலனை பிறருக்கு தராது. நம்முடைய மக்கள் பணியானது, நம்மை குழும வாழ்க்கையிலிருந்து பிரித்தெடுக்க நம்மை அதிமாக இழுக்கிறது. எந்த ஒரு மனிதன் சகோதரத்துவ மனப்பான்மையோடு வாழவில்லையோ, அவன் துறவற வாழ்க்கையே அர்த்தமுள்ள விதத்தில் வாழ முடியாது. ராபர்ட் சழடிலளனடி;பஅயடை.உழஅ இறையியலாளர் அறிமுகம் - பேராசிரியர் காஞ்சா இளையா கடந்த 25 ஆண்டுகளாக “தீண்டாமை” என்னும் இழிச்செயலை இந்தியாவில் இருந்து வேரறுக்க போராடிக்கொண்டிருக்கும் ஒரு சிறப்பான போராளிதான் பேராசிரியர் காஞ்சா இளையா (னுச.முயnஉhய ஐடயiயா). அக்டோபர் 5, 1952ல் பிறந்த இவர் ஒரு சமூக ஆர்வலர். ஹைதராபத்தில் இருக்கும் உஸ்மானியா பல்கலைகழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்றைய இந்திய சூழலைமையப்படுத்திய நிகழ்வுகளும், சமயஅடிப்படைவாதமும், தலித்திய கோட்பாடுகளும் இவருடைய படைப்புகளின் மையக்கோட்பாடுகள். புத்தமதத்தைத் தழுவிய இவர் இந்திய சாதீய கட்டமைப்பிற்கு எதிராக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து போராடிவருகிறார். உற்பத்தி செய்வதுஎன்பது தலித் மக்களின் வேலை என்றும் உற்பத்தி செய்தல் என்பது தாழ்த்தப்பட்ட ஒன்று என்றும் ஆதிக்க சாதியினர் கருதுகிறார்கள். எனவே அவர்களையும் உற்பத்தி தொழிலில் கட்டாயமாய் ஈடுபடுத்தும்போது சமத்துவம் உருவாக வாய்ப்புகள் அதிகம் என்பது இவரது கருத்து. கடவுளர்கள் எல்லாருமே தலித் மக்களைக் கொல்கின்ற கடவுளர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். எதிர்த்து நிற்பவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடாமல், கொலை செய்வதைதான் முடிவு என்று போதிக்கும் மதங்கள் உண்மையான மதங்களாக இருக்க முடியாது. தலித் சமுதாயம் என்றுமே சாதி அடிப்படையில் பிரிந்திருப்பதில்லை. அது ஒரு சமநீதி சமுதாயமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கும். கல்வி புகட்டப்பட்ட தலித் சமூக அமைப்பு இந்தநாட்டிற்கே ஒரு முன்மாதிரியான சமுதாயமாய் இருக்கும் என்பதை காஞ்சா இளையா வலியுறுத்துகிறார். “ஹிந்துநாடு” என்று மற்றவர்கள் முழங்கினால் நாமும் “தலித் நாடு” என்று முழங்குவோம். நம்மை வெறுத்து ஒதுக்கியவர்களை இனி நாம் வெறுத்து ஒதுக்குவோம் என்று மக்களை அழைக்கிறார். மாத்ருபூமி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் ஆகஸ்டு மாதம் 24ம் தேதி 2012ல் வெளியான இதழில் மோடிதான் பிரதமர் பதவிக்கு பி.ஜே.பியினரால் நிறுத்தப்படுவார் என்றும் அதற்கான பின்னணியில் சாதியம் இருப்பதையும், அதன் மூலம் இந்தியாவில் மதக்கலவரங்களும், வகுப்புவாதபிரச்சனைகளும் வரும் என்றும் 2002-லேயே காஞ்சா இளையா கூறியதாக அச்சிடப்பட்டுள்ளது. நிகழ்காலத்தில் இருந்துகொண்டே எதிர்காலத்தினைத் துல்லியமாக கணிக்கும் அளவுக்கு அவர் அறிவுநுட்பம் உடையவர். கருத்துக்களால் மட்டுமல்ல செயல்களாலும் இவர் அடித்தட்டு மக்களை சென்று அடைந்துள்ளார். 1985ஆம் ஆண்டில் மகபூப் நகரிலே பட்டினிசாவுகள் நிகழ்ந்தபோது தன்னுடைய சொந்த செலவிலும் மற்றவர்களின் உதவியாலும் இலவச உணவு வழங்கி பலரின் உயிரைப் பாதுகாத்தார். இந்தியாவினை அழிவிற்கு இட்டுச்செல்லும் சாதியகொடுமைகளையும், தலித் மக்களின் அடிமைதனத்தையும் அவர்களை அடிமைப்படுத்த நினைப்பவர்களை எதிர்த்தும் பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகிறார். இவரதுசிலபடைப்புகள்: • றூல ஐ யுஅ ழேவ ய ர்iனெர: யு ளுரனசய உசவைஙைரந ழக ர்iனெரவஎய phடைழளழிhலஇ உரடவரசந யனெ pழடவைiஉயட நஉழழெஅல(ஊயடஉரவவய: ளுயஅலயஇ 1996) • புழன யள Pழடவைiஉயட Phடைழளழிhநச: டீரனனாய'ள ஊhயடடநபெந வழ டீசயாஅinளைஅ (ஊயடஉரவவய: ளுயஅலயஇ 2001) • னுநஅழஉசயஉல in ஐனெயை: யு ர்ழடடழற ளூநடட (நனவைநன டில யுசவாரச டீழnநெச) • டீரககயடழ யேவழையெடளைஅ: யு ஊசவைஙைரந ழக ளுpசைவைரயட குயளஉளைஅ (ஊயடஉரவவய: ளுயஅலயஇ 2004) • Pழளவ-ர்iனெர ஐனெயை: யு னுளைஉழரசளந in னுயடவை-டீயாரதயnஇ ளுழஉழை-ளுpசைவைரயட யனெ ளுஉநைவெகைiஉ சுநஎழடரவழைn (ளுயுபுநு Pரடிடiஉயவழைளெ Pஎவ. டுவனஇ 2009) • ருவெழரஉhயடிடந புழன: யு ழேஎநட ழn ஊயளவந யனெ சுயஉந (முழடமயவய: ளுயஅலயஇ 2011) மற்றவர்களால் ஒரு இறையியலாராக இன்னும் அறியப்படாவிட்டாலும், ஏழைகளுக்கும், சின்னஞ் சிறியவர்களுக்கும் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்னும் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கேற்பவும், அடித்து நொறுக்கப்பட்டு, விடியலின் வெளிச்சத்திற்காய் எங்குசெல்வது எனதெரியாமல் இருட்டிலே தடவிக்கொண்டிருக்கும் தலித் மக்களுக்கான வழிகாட்டியாகவும் இருப்பதாலும், செயலில் காட்டுவதாலும் காஞ்சா என்னும் இப்பேராசிரியர் தலித் இறையியலில் என் பார்வையில் ஒருமுக்கிய இடத்தைபிடித்துள்ளார். பாரதி சிங்கராயர் டிhயசயவாளையளய;பஅயடை.உழஅ (சமூக ஆன்மீக கட்டுரைகள்) இலங்கையின் அரசியல் மாற்றம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்துமா? ஏமாற்றத்தையே வாழ்வாக கொண்ட ஈழத்தமிழர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தைக் கொணரப்போகின்றதோ இந்த அரசியல் மாற்றம்? என்ற கேள்விதான் இன்று அனைவரது உள்ளத்திலும் உதயமாகியிருக்கின்ற கேள்வி. ஈழத்தமிழர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட அரசியல் மாற்றம் மட்டும் போதுமா? என்றால். நான் போதாது என்றே சொல்வேன். மாற்றம் தேவை ஆனால் அது அரசியல் மாற்றத்தோடு நில்லாது ஈழத்தமிழர்களின் வாழ்வில் மாற்றம், மனதில் மாற்றம், நிலையில் மாற்றம் என்று மாற்றம் காணப்பட வேண்டிய பல வழிகள் இருக்கின்றது. ‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்ற பழமொழி நினைவிற்கு வருகிறது. தந்திரமாய் தமிழர்கள் ஏமாற்றப்பட அனுமதியளித்த நிலைமாறி ராஜத்தந்திரத்தோடு தமிழ் இனம் சபைக்காணச் செய்ய வேண்டும். அதற்கு தமிழர்கள் எவ்விதத்திலும் சிங்களர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்க வேண்டும். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நமட்டு காரணங்களைச் சொல்லி தள்ளிவிடாது அவை நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு என்று வாய்ப்புகளை உருவாக்கி வாய்ப்புகளை உள்வாங்கி அவர்கள் வழியில் சென்று தன் வழி(லி)யை மறக்காமல் நேரம் வரக்காத்திருந்து உரிமை பெற வேண்டும். தமிழர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்குக் கேடு விளைவிப்போர் பிறர் அல்ல மாறாக நமக்கு தீங்கு இளைப்போரும் நமக்குள்ளே தான் உள்ளனர். நம் தமிழ் இனம் பெற்ற சாபமோ, கேடோ ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழர்களின் வளர்ச்சி தடைபெறச் செய்வதற்கு ஒரு ஊமைத்துரையோ, கருணாகரனோ இருக்கத்தான் செய்கின்றார்கள். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி கண்ட, தமிழர்களை இனத்தோடு வேரறுக்க முயன்ற ராஜபக்சே ஆணவமாய் சொன்ன வார்த்தை “ நான் தோல்வி கண்டதற்கு முழுமுதற் பொறுப்பு தமிழர்களே தான். அவர்கள் ஓட்டு எனக்கு கிடைக்கவில்லை நான் தோற்றால் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்துவிடுமா என்ன? அதிகாரம் என் கைகளை விட்டு மற்றொரு சிங்களரிடமே மாறியிருக்கிறது தவிர பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை. இத்தோல்வியை என்னால் மறக்க முடியாது” என்று வஞ்சம் மிகுந்த நெஞ்சத்தினனாய் பேசியிருப்பது சிந்திக்கத்தக்கது. இங்கே நான் அண்மையில் படித்த ஒரு புத்தகத்தின் கருத்துக்களைக் குறிப்பிட விரும்புகிறேன். அது அறிஞர் அண்ணாவின் “நிலையும் நினைப்பும்” என்ற அவரது மேடைப் பேச்சின் புத்தக வடிவம் தான் அது. அதில் அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு மனிதனின் நினைப்பு அவன் இருக்கும் நிலையைப் பொறுத்தே அமையும் என்கிறார். அதாவது சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற பழமொழியை உயர் மொழியில் கூறுகின்றார். மேலும் அவர் ஒருவரின் நிலை உயர அவரின் நினைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார். சற்று சிந்தித்துப்பார்த்தால் தெரியும் அவரின் வார்த்தைகளில் உள்ளது உண்மையா என்று. அதற்கு அவர் எடுத்துக்காட்டும் தருகின்றார் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் தொழிலாளியின் நினைப்பு அவர் வசிக்கும் குடிசை வீட்டிற்கு ஏற்றார் போன்றே இருக்கும் காரணம் அவர் நிலையே அவரது நினைப்பை நிர்ணயிக்கின்றது. மேலும் இது போன்ற வீட்டை தம்மால் நினைத்துப்பார்க்கக்கூட தகுதியில்லை என்றும் எண்ணிக்கொள்வர். எளிமைப்படுத்த வேண்டும் எனில் நடப்பவனின் எண்ணம் மிதிவண்டி வாங்குவதிலும், மிதிவண்டி வைத்திருப்பவனின் எண்ணம் மோட்டார் சைக்கிள் வாங்குவதிலும், மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவனின் எண்ணம் மகிழ்வுந்து வாங்குவதிலும் தான் இருக்கும் என்கிறார். இதனை நான் இங்கு குறிப்பிடக் காரணம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் அரசியல் மாற்றம் எத்தகைய மாற்றம் கொணரப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் அதற்கு முன் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர்களின் அத்தியாவசிய தேவைகள் எவ்வாறு சந்திக்கப்படுகின்றன என்பதை குறித்து முதலில் அக்கறைக் கொள்வோம். அவர்கள் அடித்து நொறுக்கப்பட்டபோது அமைதிகாத்த நாம் இதனைக்குறித்து பேசுவதற்குத் தகுதியற்றவர்கள் என்பதே எனது தாழ்மையான கருத்து. நம் இனம் என்ற மனப்பாங்கைத் தொலைத்துவிட்டு வெறும் பார்வையாளர்களாய் இருப்பதில் பயன் ஏதும் இல்லை. நோவுகண்டவனுக்கே வலித் தெரியும் நோவாமல் இருக்கும் நமக்கு என்ன தெரியும். இது சரியில்லை அதுசரியில்லை, இது எத்தகைய மாற்றம் கொணரும் அது எத்தகைய மாற்றத்தை கொணரும் என்று விவாதங்களில் நேரத்தை செலவிடாமல் நம் மத்தியில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நாம் என்ன செய்திருக்கின்றோம்? என்பதைச் சிந்திப்போம். செபாஸ்டின் ளநடியளவயையெசரn03;பஅயடை.உழஅ அடிமையாக்கப்படும் தொழிலாளர்கள் பறவைகள் சிறகடித்து பறந்திடவும் மயில்கள் தோகை விரித்து நடனமாடிடவும்; காற்று தன் விருப்பம்போல் வீசிடவும் உரிமையிருக்கும் பொழுது மனிதன் மட்டும் அடிமையென்னும் கூட்டிற்குள் அடிமைப்பட்டதேனோ? சுதந்திரம், இது அனைவரும் பாரபட்சமின்றி சுவாசிக்கப்பட வேண்டிய காற்று. வேற்று நாட்டவன் அடிமைபடுத்தும் பொழுது பொங்கியெழும் மனிதன் தன் இனத்தவனை தானே அடிமை படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது. இறைவனால் சுதந்திரமாகப் படைக்கப்பட்ட மனிதன் காலப்போக்கில் அடிமையாகிப்போனான். அடிமையாகிப்போவன் தன்னைவிட வலிமையற்றவர்களை அடிமையாக்கி தன்பலத்தைக்காட்டி, தன்பழியைத் தீர்த்துக்கொண்டான். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் பலத்தைக்காட்ட அடிமைகளுக்கு மட்டும் இன்று உலகில் பஞ்சமில்லையென்று ஆணித்தரமாக கூறலாம். உலகில் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு தொழிலாளி அடிமைப்படுத்தப்பட்டு நசுக்கப்பட்டு வருகிறான். முதலாளி தொடர்ந்து முதலாளியாகவும் தொழிலாளி தொடர்ந்து தொழிலாளியாகவும் இருப்பது எவ்வளவு பெரிய அடிமைத்தனம். எங்கெல்லாம் அடிமை நசுக்கப்படுகிறானோ அங்கு மனிதமும் நசுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் அடிமையாக்கப்படுவது ஏதோ சிறிது காலத்திற்கு முன்போ அல்லது சில நூற்றாண்டுகளுக்கு முன்போ தோன்றிய ஒன்று அல்ல. அடிமைகள் தோன்றிய காலம்தான் எப்பொழுது? உலகம் தோன்றியது முதலே, அடிமைகள் இருந்தார்கள் என்றால் அது மறுக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் அப்பொழுது மனிதன் கிடைத்ததை உண்டு ஒரு நாடோடி மனிதனாகவே வாழ்ந்து வந்தான். அதனால் அப்பொழுது அடிமைத்தனம் தோன்ற வாய்ப்புகள் இல்லை. மாறாக எப்பொழுது ஒரு மனிதன் நாகரீக மனிதனாக உடுக்கவும் உண்ணவும் மற்றும் தனக்கென்று இருப்பிடத்தையும் உண்டாக்க ஆரம்பித்தானோ அன்று முதலே அவன் தன்னலமாகவும் முதலாளியாகவும் வாழ ஆரம்பித்து தனக்கென்று ஒரு தொழிலாளியை ஏற்படுத்திக்கொண்டான். ஆம் மனித நாகரீகத்தின் தொடக்கமே, அடிமையாக்கப்பட்ட தொழிலாளர்களின் தொடக்கமாகவும் அமைந்தது. ஒரு அடிமை தொழிலாளியின் உருவாக்கம்தான் என்ன? ஒரு வலியவன் முன்பு ஒரு எளியவன் அடிமைத்தானே? இருப்பவன் முன்பு இல்லாதவன் அடிமைதானே? எதிர்ப்பவன் முன்பு எதிர்க்க இயலாதவன் அடிமைதானே? இவ்வாறுதான் ஒரு அடிமை உருவாக்கப்படுகின்றான். பாவம் அவன் என்ன செய்வான்? இருந்தால் முதலாளியாகியிருப்பானே? இல்லாததால் தானே அடிமையாகி தொழிலாளியாகிவிட்டான். மனித வரலாற்றை சற்று புரட்டிப்பார்த்தோம் என்றால் போர்களினால் உலகில் அதிகப்படியான அடிமைகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். மனித வரலாற்றில் அடிமைத் தொழிலாளர்கள் உருவானதும் மற்றும் உருவாக்கப்பட்டதும் படுபயங்கரமான போர்களினால்தான். போர்களினால் பலர் மாண்டதோடு மட்டுமல்லாமல் பிழைத்தவர்களை நாடுகடத்தி அவர்களை அடிமைத் தொழிலாளர்களாக்கி, சித்திரவதை செய்ததை இந்த உலகம் அறியும். எகிப்து நாட்டில் இஸ்ரயேல் மக்கள் அடிமையாக்கப்பட்டு தொழிலாளர்களாக வாழ்ந்தார்கள். கி.மு 18ம் நூற்றாண்டில் பாபிலோனியாவில் அடிமைகள் பலர் இருந்தனர். கிமு 7ம் நூற்றாண்டில் கீரிஸ் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான ஸ்பார்ட்டா மற்றும ஏதென்ஸ் நகரில் தொழிலாளர்கள் பலர் அடிமைகளாக வாழ்ந்தனர். கிமு 2-ம் நூற்றாண்டில் ரோமானியர்களுக்கு சேவை புரிவதற்கு பல அடிமைத் தொழிலாளிகள் இருந்தனர். ஏன் பல ஆண்டுகளுக்கு முன்பு மட்டும் தானா? சென்ற நூற்றாண்டிலும் அமெரிக்காவில் பல கருப்பின மக்களும் இந்தியாவில் வெள்ளையர்களுக்கு சேவைபுரிய பல தொழிலாளர்களும் அடிமைகளாக இருந்து ஊழியம் புரிந்ததை புகழ்பெற்ற நூல்களும,; நாவல்களும,; திரைப்படங்களும் உலகத்திற்கு வெளிச்சம்போட்டு காட்டியதை அனைவரும் அறிந்த ஒன்று. மேற்குறிப்பிட்ட அடிமைகள் அனைவரும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப தண்டனைகளையும் கொடுமைகளையும் அனுபவித்தனர். அடிமை என்பதும் ஒரு குலத்தொழிலாக மாறிப்போனது. இப்படி அமுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட தொழிலாளர்கள் உணர்ச்சிப்பெற்று கார்ல் மார்க்ஸ் போன்ற மாபெரும் தத்துவயியலாளர்களால் தூண்டப்பட்டு முதலாளித்துவத்திற்கு எதிராகவும் அடிமைத்தனத்திற்கு எதிராகவும் போராடி அதில் வெற்றியும் கண்டதை காலம் நமக்கு கண்ணாடிப்போன்று பளிச்சிட்டு காட்டிவிட்டது. கொட்டகொட்ட குனியும் வரைதான் அடிமை. வீறுகொண்டு எழும்பொழுது கைவிலங்குகள் அகற்றப்பட்டு யாராலும் கட்டுப்படுத்த இயலாத சுதந்திர மனிதன் என்பதை அடிமைத்தொழிலாளர்களுக்காக போராடி வென்று சாதித்தவர்கள் நமக்கும் இனிவரும் தலைமுறைக்கும,; கற்றுத்தரும் பாடம். நாம் வாழும் இன்றைய சமுதாயத்திலும் தொழிளலர்கள் அடிமையாக்கப்பட்டுதான் வருகிறார்கள். ஒரு தொழிளாளியின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத பொழுது அவன் வாழ்க்கை கேள்வி குறியாகி விடுகிறது. அவன் தானாகவே அடிமை நிலைக்கு தள்ளப்படுகிறான். அடிமை தொழிலாளர்களில் தான் எத்தனை விதங்கள், அவர்களுக்கு தான் எத்தனை துன்பங்கள். அறிவியல் நுட்பங்கள் வளர்ந்த இந்த காலக்கட்டங்களிலும் தொழிலாளர்கள் அடிமையாக்கப்பட்டுதான் வருகிறார்கள். காரணம் வளர்ந்து வரும் மனிதனின் ஆதிக்க சக்திதான். உழைப்புக்கேற்ற ஊதியம், மனிதனுக்கு ஏற்ற மதிப்பும் கொடுத்தாலே தொழிலாளியும் தன்மானத்துடன், மாண்புடன் வாழ்வான். இவை மறுக்கப்படும் நிலையில் எந்த ஒரு தொழிலாளியும் அடிமைதான். அடிமை தொழிளாளர்களின் நிலையை உயர்த்த நமது நிலைதான் என்ன? சட்டங்கள் இருந்தாலும், சாக்கடைகளை கைகளால் அல்லும் அடிமைத்தொழில் இன்னும் நீங்காமல் தானே இருக்கிறது? தொழிளாளர்களை நாமே அடிமையாக்கி விட்டு, அவர்களுக்காக அரைக்கூவல் விடுப்பதில் என்ன இருக்கிறது? சமுதாயத்தில் தொழிலாளர்கள் அடிமையாக்கப்படும் வரையில் நாமும் அடிமைகள் தான் என்பதை உணர்வோம். வில்லியம்ஸ் றடைடயைஅள;பஅயடை.உழஅ நேர்மறை சிந்தனை நேற்மறை சிந்தனை (Pழளவைiஎந வுhiமெiபெ) மனிதர்களாகிய நமக்கு தேவையா? தேவையில்லையா? நேர்மறை சிந்தனையால் நாம் அடையும் பயன்கள் போன்றவற்றை அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், சமூக ர்Pதியாகவும் நாம் இக்கட்டுரையில் பார்ப்போம். ‘நான் நேர்மறை சிந்தனையாளராக மாற’ இக்கட்டுரை எனக்கு உதவப் போகிறது என்ற நேர்மறை எண்ணத்தோடு படிக்க ஆரம்பிப்போம். திருவிவிலியத்தின் வழியாக நேர்மறை சிந்தனையாளரான இயேசு கூறுவதாவது (மத் 6:27, மத் 7:1-3), “கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழும் கூட்ட முடியும்?” “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போது தான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதிரியின் கண்ணில் துரும்பை நீங்கள் கூர்ந்து கவுனிப்பதேன்?” இயேசுவின் இவ்வார்த்தைகள் நம்மை நேர்மறையாக வாழ்வையும், மனிதரையும் அணுக அழைக்கின்றது. நேர்மறை சிந்தனை என்றால் என்ன? எந்த ஒரு முயற்;சியிலும் சில குறைபாடுகள் இருக்கும். ஆனால் அவற்றையும் மீறி அதில் உள்ள நல்ல வி~யங்களையே பார்ப்பது என்பது ஒரு நேர்மறை சிந்தனையே. நிறைகளோடே அனைவரையும் பார்ப்பது, செயல்களைச் செய்வது, மேற்கொள்வது, பழகுவது, பேசுவது போன்றவை அனைத்தும் நேர்மறை சிந்தனையின் வெளிப்பாடே ஆகும். மூளையும், மனதும் சேர்ந்து நல்லதையே சிந்திப்பதும், நல்லதே நடக்கும், அனைத்தும் நன்மைக்கே என்ற முடிவை எடுக்க சிந்திக்க வைப்பதே நேர்மறை சிந்தனை ஆகும். நேர்மறை சிந்தனையாளர்களாக நாம் என்ன செய்ய வேண்டும்? எதிர்மறை சிந்தனையிலிருந்து நேர்மறை சிந்தனையாளராவது எளிது, அதற்கான நேரமும் குறைவே. தொடர் முயற்சியும் செயல்படுத்துதலும் இன்றியமையாததாக இருக்கின்றது. நேர்மறை சிந்தனையாளராக முதலில் நாம் எதை பற்றி எதிர்மறை சிந்தனையில் மூழ்கி இருக்கின்றோம் என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் உங்களுக்குப் பிடிக்காதவரை பார்க்கும் போது அவரைப் பற்றிய கெட்ட எண்ணம் தோன்றலாம், வேலைக்குச் செல்லும் இடத்தைப் பற்றிய கெட்ட எண்ணம் மற்றும் பல இதில் அடங்கும். நமக்கு கெட்ட சிந்தனை, எதிர்மறை சிந்தனை எதை பார்க்கும் போது வருகின்றது என்பதை கண்டறிந்து நாம் இரண்டாவதாக நாம் நம்மையே கட்டுப்படுத்த வேண்டும். நாம் எப்போதெல்லாம் எதிர்மறையாக சிந்திக்கின்றோம் அப்போதெல்லாம் நாம் நம் சிந்தனையை நிறுத்தி, ஆய்வு செய்து, அங்கே நேற்மறை சிந்தனையைப் பாய்ச்ச வேண்டும். இதை மேற்கொள்ள எளிமையான வழி சிரிப்பது முக்கியமாக யாராவது ஜோக் அடிக்கும் போது, வித்தியாசமாக செய்யும் போது, நாம் செய்த சில காரியங்கள் கூட யோசித்துப் பார்க்கும் போது நமக்குச் சிரிப்பாக தோன்றும். அந்த நேரங்களில் எல்லாம் நாம் சந்தோ~மாக சிரிக்க வேண்டும். இது நேர்மறை சிந்தனைக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும். உடற்பயிற்;சி, சத்துள்ள உணவு, மற்றும் யோகா பயிற்சியும், தினமும் இரவு நேரத்திலே இன்று நாம் அடைந்த நன்மைகளை மட்டும் எழுதுவது போன்றவை, நம்மை பல கவலைகளிலிருந்து மீட்கச் செய்யும், மன அழுத்ததைக் குறைக்கும். எனவே இவையும் நேர்மறை சிந்தனைக்குப் பெரிதும் உதவும். நம் நண்பர்கள் எப்போதும் குறை கூறுபவர்களாகவே இருந்தாலே, கெட்ட எண்ணம் படைத்தவர்களாகவோ எப்போதும் உங்களைக் கேலி செய்பவர்களாவோ இருந்தால் உங்களால் நேர்மறையாக சிந்திப்பது கடினம். எனவே நல்ல நண்பர்களையும், உங்களை ஊக்கப்படுத்துபவர்களையும், நேர்மையாக தவறுகளைச் சுட்டிக் காட்டுபவர்களையுமே நண்பர்களாக வைத்துக்கொள்வுது நல்லது. அது முடியாவிட்டால் உங்களை சுற்றி இருப்பவர்களை நல்லவர்களாகவே, ஏதோ ஒரு விதத்தில் நமக்கு கற்றுத் தருபவர்;களாக எடுத்துக் கொள்ளவேண்டும். இவையும் நேர்மறை சிந்தனைக்கு உதவும். இன்னொரு முக்கியமான வழி உங்களுக்குள்ளே, உங்களிடமே நீங்கள் நேர்மறையாக பேசிக்கொள்ள வேண்டும். உன்னால் முடியும், நீ நல்லவன், நீ சந்தோ~மாக இரு, மற்றவரை உன்னைபோல் பார் போன்ற கருத்துக்களை நீங்கள் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள வேண்டும். முக்கியமாக உங்களை நீங்கள் பாராட்டிக் கொள்ள வேண்டும். நேர்மறை சிந்தனையால் நமக்கு கிடைக்கும் பயன்கள்: நேர்மறை சிந்தனையால் நாம் செய்யும் தின வேலைகளை அன்போடு செய்ய முடிகின்றது நாம் செய்யும் வேலைகளில் நமக்கு ஈடுபாடும் அதிகமாகிறது. சுமையாக இல்லாமல் சுகமாக மாறுகிறது. நம்மோடு இருப்பவர்களை நம்மால் ஈர்க்க உதவுகின்றது. அறிவியல் ரீதியாக பார்க்கும் போது நம் மனம் எப்போதும் நேர்மறையாக சிந்திக்கும் போது உடலும் ஆரோக்கியமாக இருக்க முடியும், நோய்கள் வருவதை தடுக்கலாம், என்றும் இளமையாக இருக்கலாம். அடுத்தவர் என்ன செய்ய வேண்டும் என்பதை நினைக்காமல் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கின்றது. வன்மம், பயம், குரோதம், வெறி போன்றவை மறைகின்றது. காரணம் நம் எதிரியை மதிக்க நேர்மறை சிந்தனை கற்றுத் தருகின்றது. தான், தன்னுடையது என்ற சுயநல உணர்வும் மறைகிறது. அனைத்தையும் நேர்மறையாக பார்ப்பது அனைத்திலும் இறைவன் இருக்கின்றார் என்ற எண்ணத்தையும் உண்டாக்குகின்றது. வேறுபாடுகளை களைந்து ஒருவரைப் பார்க்கும் போது அவனை ராம் என்றோ, ராபின் என்றோ சலீம் என்றோ வேறுபடுத்திப் பார்க்காமல் இறைவனால் படைக்கப்பட்ட, தன்னைப்போல் மதிக்கப்படக் கூடிய மனிதனாக பார்க்க வைக்கின்றது. சுய நலம் போய் சமூக முன்னேற்றப்பார்வை நமக்குள்ளே தோன்றுகின்றது. இதைத்தான் பாரதியார் கூறுகிறார். “எல்லோரும் ஓர் இனம் - எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர்” – எனவே நம்மிடமிருந்து விடுதலைப்பெற நேர்மறை சிந்தனை பெரிதும் உதவுகின்றது. எளிமையாய் பாரங்களை களைந்து வாழு, காற்றைப்போல் கனமில்லாமல் வாழு. வெளிச்சத்தைப்போல் வெளிப்படையாய் சந்தோ~மாக வாழ, பிறரை வாழ்விக்க, தண்ணீரைப் போல் தடையில்லாமல் அனைத்தையும் மேற்கொள்ள நேர்மறை சிந்தனை பெரிதும் உதவுகின்றது. நேர்மறை சிந்தனையின் மூலம் நம்மை நாம் ஊக்குவிக்கும் போதும், பிறரை பாராட்டும் போதும், அனைத்திலும் நல்லதையே எடுத்துக் கொள்ளும் போதும், நம்மால் எந்த ஒரு பெரிய சவாலையும் சந்திக்க முடிகிறது. எந்திலையையும் அன்பால் வெல்ல முடிகிறது. இதைத்தான் வள்ளுவர் கூறுகின்றார்: “பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலித்தாக் குறின்.” ‘ஆயிரக்கணக்கான மையில்களைக் கொண்ட பயணம் கூட ஒரு சின்ன அடியில்தான் ஆரம்பமாகிறது’. நாம் சந்தோ~மான மனிதராக மாற மற்றவரை சந்தோ~மானவர்களாக மாற்ற, நீளமாக காவியமான வாழ்க்கையை ஒரு எழுத்தால் ஆரம்பிப்போம் நேர்மறை சிந்தனைக் கொண்டவர்களாக. இப்பிரபஞ்சமே நேர்மறை சிந்தனையால் உருவானது என்பதை நம்பும் நாம் ஏன் நேர்மறை சிந்தனையாளர்களாக மாறக்கூடாது.? நாம் நேர்மறை சிந்தனை கொண்டவர்களாய் திகழும் போது நாம் உப்பாக, ஒளியாக, விதையாக மாறுகின்றோம், உலகில் மாற்றத்தை கொணறும் கருவியாகின்றோம். வின்சென்ட் பிரபு எinஉநnவிசயடிரளனடி;பஅயடை.உழஅ சாதனை புரிந்த போஸ்கோரி நஞ்சையும் புஞ்சையும் நாளும் செழிக்கும் தஞ்சை மண்ணில், நெஞ்சை கொள்ளை கொண்ட மாபெரும் நிகழ்வு ‘12-வது போஸ்கோரீ’. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கலந்து கொண்ட சாரண, சாரணியருக்கான நான்கு வருடத்திற்கு ஒருமுறை, வௌ;வேறு மாநிலங்களில் நடைபெறும். இவ்வருடம் தஞ்சையில் நடைபெற்றது. போஸ்கோரீ’, சாரண சாரணியருக்கான முகாம் நிகழ்வு திருச்சி சலேசிய மாநில சலேசிய குடும்பத்தாரால் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. 30.12.2014 முதல் 3.01.2015 வரை நடைபெற்ற கோலாகலமான இந்த முகாம், “உலகை நலமாக்க (ர்நயட வாந றழசடன) என்ற தலைப்பை மையமாகக் கொண்ட 12-ஆம் போஸ்கோரீ ஆகும். இந்தியாவின் 20 மாநிலங்களில் இருந்து வந்த 4000 சாரண சாரணியர்கள் இளமைத்துடிப்புடனும் படைப்பாற்றலுடனும், உற்சாகமாக இதில் கலந்து கொண்டனர். மிக பிரம்மாண்டமான முறையில் இந்திய குடியரசு தின அணிவகுப்பு போன்று அனைத்து மாநிலங்களிலிருந்து வந்திருந்திருந்த சாரண சாரணியர்கள் பெயர் கொண்ட பதாகைகளுடன் அணிவகுத்துச் செல்ல இந்த 12-வது போஸ்கோரீயை ஏற்று நடத்தும் திருச்சி சலேசிய மாநிலத்தின் தலைவர் அருட்தந்தை. ஆல்பர்ட் ஜான்சன் அணிவகுப்பில் வணக்கத்தை ஏற்றார். பின்பு ஓய்வு பெற்ற சாரண பொருப்பாளர்கள் தேசிய கொடியையும், சாரணக் கொடியையும் போஸ்கோரீ கொடியையும் ஏற்ற, திருச்சி சலேசிய மாநிலத்தலைவர் ‘உலகை நலமாக்க’ (ர்நயட வுhந றுழசடன) எனும் அழைப்போடு துவங்கிவைத்தார். இத்துவக்க விழாவின் சிறப்பு விருந்தினராக ராமன் மகாசேசே விருது பெற்ற திரு. குழந்தை பிரான்சிஸ் வந்து சிறப்பு சேர்த்தார். உலகை நலமாக்க இயற்கை வளம் கொண்டு இனிமையே கொடுத்த பூமியில், அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் அடுக்கடுக்காய் காயப்படுத்துகிறோம் இவ்வுலகை. அமைதியான பூமியில் அணு ஆயுத சோதனை என்று புவி அடுக்குகளையும் ஆட்டம் காணவைக்கிறோம். உலகம் வெப்பமாகுதலால் ஒருபுறம் உருக, மறுபுறம் வரண்டு காணப்படுகின்றது. நீர், நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தையும் மாசுபடுத்தி உலகை மட்டுமல்ல அதிலுள்ள உயிர்கள் அனைத்தையும் காயப்படுத்துகின்றோம். இச்சூழ்நிலையில் உலகை நலமாக்க என்ற தலைப்பை மையமாகக் கொண்டு 12-வது போஸ்கோரீ துவங்கப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் இதனையே மையமாக கொண்டு செயல்பட்டது. 12-வது போஸ்கோரீயின் வசீகரிக்கும் கீதத்தால் உலகை நலமாக்கு (ர்நயட வாந றழசடன) என்ற வார்த்தைகள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தாரகமந்திரமாக ஒலித்தது. புலர்ந்த புத்தாண்டு ஒன்றுபட்ட சமூகமாய், ஒருமித்த சிந்தணைகளுடன் ‘தொன் போஸ்கோ’ என்ற ஒரே பெயரின் கீழ் இந்த 2015 புத்தாண்டில் அடிவைத்தது சிறப்புமிக்க ஒன்று. சலேசிய தெற்காசிய மண்டலத்தலைவர் அருட்தந்தை.மரிய ஆரோக்கியம் கனகா, இப்புத்தாண்டில் சிறப்புத்திருப்பலி ஆற்றி ஆசீர் வழங்கினார். வேற்றுமையில் ஒற்றுமை காணும் வகையில் திருப்பலிக்கு முன் அனைத்து கலாச்சாரத்தின் சங்கமாய் அவரவர் கலாச்சார பாரம்பரிய உடையில் வந்து தீமையை எரித்து நன்மையை வரவேற்று புத்தாண்டில் கால்பதிக்க உதவினர். அமைதி ஊர்வலத்தில் “உலகை நலமாக்க” என்ற உன்னதமான கருத்தை ஊருக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் 4000 சராண சாரணியர் அமைதி ஊர்வலத்தில் பங்கு கொண்டனர். தஞ்சை தொன்போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் திரு.ஜி.தர்மராஜன் ஐPளு என்பவரால் துவக்கிவைக்கப்பட்டு தஞ்சை கத்திட்ரல் ஆலயத்தில் அதாவது சலேசியர்கள் முதன்முதலில் தடம்பதித்த இடத்தில் முடித்துவைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ‘உலகை நலமாக்க’ என்ற கோசங்களோடும், பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டும் தங்களது கலாச்சார உடையில் நடனமாடிக்கொண்டும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர். அழியா கலாச்சாரத்துடன் மாறிவரும் உலகினில் நாகரீக மாற்றம், தொழில்நுட்ப ஏற்றம் என, ஆடம்பரத்திற்கும், அற்பசெயல்களுக்கும் வழிவிட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டு, பாரம்பரியத்தையும் காட்சிபொருளாக்கியுள்ளது. கிராமிய நடனங்கள் கேவல நடனமாக்கப்பட்டுள்ளது. ஆதிவாசிகள் நடனம் அரவம் இல்லாமல் சாகின்றது. இருப்பினும் இதற்கு மத்தியில் தங்கள் கலைகளை மறக்காது, மதித்து மெருகேற்றிய சாரண சாரணியர்களின் திறன் வியக்கத்தக்கது. பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஒவ்வொருவரும் அவரவர் மரபுக்கேற்ப உடையணிந்து நடனமாடியது விந்தை வாய்ந்த ஒரு செயல். உலகமயமாக்கலில் காணாமல் போகாத சில மரபுகள் நாட்டில் இருப்பது ஒரு தனிச் சிறப்பே. சாரணம் கண்ட சாதனையாளர்கள் சாரணம் என்பது ஒர் சத்தியவாக்கு. சரித்திரம் கடந்து சிந்திக்க வைக்கும் அறிய வாய்ப்பு. சகோதரத்துவத்தோடு எச்சூழ்நிலையிலும், எப்பேற்பட்ட இடரையும் எதிர்த்து நிற்கும் உறுதிகெண்ட ஒருங்கிணைப்பு. ஒவ்வொரு சாரணணும், சாரணியரும் வாழ்க்கையை சகித்துகொள்ள அல்ல சந்திக்க கற்று கொண்டவர்கள். இவர்கள் சாதனையை சித்தரிப்பவர்களாக அல்ல சாதனையின் சித்திரங்களாக மாறக்கூடியவர்கள். இந்த இளம் சாதனையாளார்களின் சாதனைகளுக்கு மெருகூட்டியது இந்த 12-வது போஸ்கோரியில் அவர்கள் படைத்த கின்னஸ் சாதனை. இதற்கு முன் நியூசிலேன்ட், நாட்டில் நடந்த ஜம்போரியில் சாரண மாணவர்கள் 3045 பேர் ஒரே நேரத்தில் காகிதத் தொப்பி அணிந்து 1 ஜனவரி 2014 அன்று கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். அந்த உலக சாதனை இந்தியாவில் தமிழ்நாட்டில், தஞ்சை மண்ணில் நான்காயிரம் சாரண, சாரணியர்கள் ஒரே நேரத்தில் 19-ம் நூற்றாண்டுகளில் கிறித்தவ குருக்கள் அணியும் தொப்பி செய்து 15- நிமிடங்கள் அணிந்து அந்த உலக சாதணையை முறியடித்தனர். இதனை அருட்தந்தை நோயல் மடிச்செட்டி ச.ச. அவர்கள் துவக்கிவைக்க, திரு.பரசுராமன் எம்.பி அவர்கள் மற்றும் திரு என். ரங்கசாமி எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் மூலம் ஒரே நேரத்தில் அதிக நபர்கள் காகித தொப்பி அணிந்து கிண்ணஸ் சாதனை படைத்தனர். உச்சம் கண்டது பலவித வீர விளையாட்டுகள், கண்காட்சி, சமையல், கோலம், கலாச்சார படைப்பு, புதுப்படைப்பு, தீமுகாம், ஓவியம், கலை ஒருங்கினைப்பு, அமைதி ஊர்வலம் அனைத்திற்கும் மேலாக கின்னஸ் சாதனை என ஐந்து நாட்களில் உற்சாகத்தின் உச்சத்திற்கு இட்டுச்சென்ற 12-வது போஸ்கோரீ அதன் உச்சத்திற்கு வந்தது. இறுதிநாளின் பிரிவு உபசார விழாவில் ஒவ்வொரு பகுதி முகாமிலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் கேடயமும் வழங்கப்பட்டது. அணைவருக்கும் நன்றி கூறியபின் முகாம் தலைவர் அருட்தந்தை ராஜதேவன் ச.ச, அதிகாரப்பூர்வமாக முடித்துவைத்தார். சாரண பொறுப்பாளர்கள் சாரணக்கொடியை மாநிலத்தலைவர் ஆல்பர்ட் ஜான்சனிடம் ஒப்படைக்க போஸ்கோரீ கொடியை மாநிலத்தலைவர் ஆல்பர்ட் ஜான்சன் அவர்கள் அருட் தந்தை மரிய சார்லஸ் அவர்களிடம் ஒப்படைக்க மாபெரும் பிரம்மாண்ட நிகழ்வு ஆர்ப்பரிப்போடு அஸ்தமனமானது. அகஸ்டின் யவெ.யரபர;பஅயடை.உழஅ இன்றைய ஆணாதிக்க சூழல் - ஒரு பார்வை ஆணாதிக்க சிந்தனைகளையும், சித்தாந்தங்களையும் அறிந்தோ அறியாமலேயோ உள்வாங்கிக்கொண்டு சிறைபட்டிருக்கும் என் தோழர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய மதிய வணக்கங்கள். 21-ஆம் நூற்றாண்டின் வளர்ச்சி பாதையில் பயணித்து கொண்டிருக்கும் நமக்கு, ஒரு விதமான நெருடல், தொய்வு, இருக்கத்தான் செய்கிறது. தொய்வுக்கான காரணங்களும், காரணிகளும பல இருப்பினும் அதில் முக்கியமான ஒன்றாக இருப்பது ஆணாதிக்க சிந்தனைகளும், அதிகார அடக்குமுறைகளும். “பெண் என்பவள் மானுடத்தின் மறுபாதி, ஏன், பெண் என்பவள் மானுடத்தின் சரிபாதி.” அப்படி இருக்க ஆடவர்களே நீங்கள் யார் அவர்களுக்கு உரிமைகளை பகிர்ந்து கொடுக்க அல்லது பறித்தெடுக்க! இன்றைய நவநாகரீக, அறிவியல் சூழலிலே, கணிணியையும் கடந்து கண்ணோடு கண் பார்த்து தொடர்பு கொள்ளும் இணைய தளத்திலே வாழ்கின்ற இந்த யுகத்திலே, ஆணாதிக்க வர்க்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைப்படுத்துவதற்காக பெண்களை மோகப் பொருளாக்கி, பால்சார்ந்து, வியாபார நோக்கத்தில் விற்பனை பொருளாக அல்லவா மாற்றி விட்டார்கள். இன்றைக்கு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி, விளம்பரங்களிலும் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? இன்றைய காலகட்டத்தில் நாட்டின் நிலைமை என்ன? பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகி இருப்பதை பார்க்கும் போது எனுக்குள்ள ஒரு பயம். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மா என்று பெண்களை போற்றி பாராட்டிய காலம் மாறி போயி, பெண்ணாய் பிறப்பதே பெரிய பாவம் அல்லது தரித்திரம் என்று புலம்கிற நிலைக்கல்லவா இன்றைய ஆணாதிக்க அடக்குமுறை இட்டுச் சென்றுள்ளது. ஏன் இந்த அவல நிலை? என் மனதில் எழும்பிய ஆணாதிக்க சிந்தனைகளை ஆணாக பதிவு செய்ய ஆசிக்கிறேன். நாம் அனைவரும் ஏதாவது ஒருவிதத்திலே மாட்டிக்கொண்டிருக்கிற ஆணாதிக்க சிறையிலிருந்து விடுபட்டுக்கொள்ள ஒரு வேள்வியாக இருக்கும் என்று எண்ணி உங்கள் முன் ஒரு சில அதிகார வர்க்க கூறுகள் பற்றிய என் விமர்சனத்தை முன் வைக்கிறேன். சார்ந்திருக்க செய்யும் ஆணாதிக்கம்: நாம் வாழும் சமுதாயம், குழந்தைப் பருவத்தில் தந்தையையும், திருமணமாகும் போது கணவரையும், முதிர்ந்த வயதில் தன் மகனையும் சார்ந்திருத்தலையே பெண்களுக்கு கற்பிக்கிறது. ஏய் பெண்ணே! உன்னால் தனியாக வாழ முடியாது. உன் பாதுகாப்பிற்கு ஒரு ஆண் துணை தேவை என்ற ஒரு மனநிலை காணப்படுவதை பார்க்கிறோம். அதே சமயத்தில், பெண்களும், மாற்றுப்பாதைக்கு வழி வகுக்க விரும்பினாலும், போராட்டங்களை எதிர்க்கொள்வததில் மனச்சோர்வடைந்து “எல்லாம் என் தலையெழுத்து,” என்று ஏற்றுக்கொண்டு வாழும் மனநிலையையும் பார்க்கின்றோம். முடிவு எடுத்தலில் ஆணாதிக்கம்: சில நாட்களுக்கு முன் என் நண்பனிடம் நடைமுறையிலே பொதுவாக சொல்லக்கூடிய ஒரு கூற்றை சொன்னேன். “நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கின்ற பெண்கள் சமமாக நடத்தப்படாத நாடு உறுப்படாது, முன்னேறாது.” இதை கேட்ட என் நண்பன் உடனே என்னைப் பார்த்து, கோபமாக, ஏன் இப்படி சொல்ற? பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறிவராங்க. சுதந்திரமாக சிறகடிச்சி, பெண்கள் விண்வெளியில் கூட தடம்பதித்திருக்காங்க. நீ, ஏன் இப்படி பெண் அடிமைத்தனம் ஆணாதிக்கமுன்னு பேசுற. இதெல்லாம் தேவையில்லாத பேச்சு என்று என் காது உரைக்க சொன்னார். உங்களில் ஒரு சிலர் இவரைப்போல இருக்கக்கூடும். இப்படிப் பேசுறவங்களுக்கு நான் ஒன்றே ஒன்றைமட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிறிய வளர்ச்சியை காட்டி, ஒட்டுமொத்த பெண் சமுதாயமே வளர்ந்துவிட்டது என்று கூறுவது வெறும் பித்தலாட்டம். இது ஒரு மாய தோற்றம். ஏங்க? நான் உங்கள கேட்கிறேன். நவீன உலகத்திலே வாழ்ந்தாலும் ஆணாதிக்க சட்டத்தில் அடிமைதனத்திற்கும், ஆதிக்கத்திற்கும் தான் இடம்; இருக்கிதே தவிர, அறிவியலுக்கு இடமில்ல. 2011, பிப்ரவரி மாதம் 18 மற்றும் 20 ஆம் தேதிகளிலே நாளேடுகளில் வெளிவந்த செய்திகளை மட்டும் குறிப்பிட விழைகின்றேன். 1. ஆடி மாதத்தில் கருத்தரித்ததற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன். 2. தன்னுடைய அனுமதி இன்றித் தன் மனைவி கருத்தடை சாதனம் பொருத்திக் கொண்டதால், ஆத்திரமடைந்த கணவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி. இதை கேட்குறப்ப சிரிப்பாக இருக்கலாம் இதிலிருக்கும் உள்ளார்ந்த கருத்துக்களை உள்வாங்க அழைக்கிறேன். இன்றைய குடும்பங்கள், ஆண்கள் செய்கின்ற குற்றங்களுக்கும் தவறுகளுக்கும், பெண்கள் தார்மீகப்பொறுப்பேற்கின்ற வகையில் தான் இருக்கிறது. குடிகார கணவனை பொறுத்து கொள்ள வேண்டும், சூதாடியை சகித்துக்கொள்ள வேண்டும், வீட்டுப்பேச்சு, வெளியில் போகாம நடத்துக்குறதுதான் பொண்ணுக்கு அழகு, இலட்சணம். அப்படி இருக்கிறவங்களுக்கு நல்ல குடும்ப பெண் என்கிற சிறப்பு பட்டம். இதே மாதிரி, ஓர் ஆணைப்பார்த்து, இவர் ஒரு நல்ல “குடும்ப ஆண்” என்று யாராவது சொல்றாங்களா? கிராமப்புறங்களில் நாம் பார்த்தோமேயானால், திருமணம் ஆனபிறகு, முடிவெடுக்கின்ற அதிகாரம், தீர்மானிக்கின்ற உரிமை ஆணிடம்தான் இருக்க வேண்டும் என்கிற நியதியை நாம் பாரக்கலாம். “எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்பதையெல்லாம் முடிவெடுக்க பெண்ணுக்கு இந்த கலாச்சாரத்தில அனுமதி இல்லை. இது திட்டம் போட்டு செய்யப்பட்;ட ஆணாதிக்க சமூத்தின் விதி.” அன்பு நண்பர்களே உண்மை கசந்தாலும், வேதனையோடு நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். தரித்திமாகும் சரித்திரம் பிறந்தது முதல் இறக்கின்ற வரை பெண்ணோடு ஆணும், ஆணோடு பெண்ணும் ஏதாவது ஒரு உறவுத்தோழமையில் வாழ்ந்தாலும், இன்றைய நாளேடுகளில் மிருகமாய காட்சியளிக்கும் ஆண்களின் நிலைக்கண்டு மனம் கலங்குகிறது. தலைநிமிர்ந்து நமக்கும் பெண் குடும்பத்திற்கு அடங்காதவள்; என்றும், தன் கருத்தை எடுத்துரைக்கிறவள் அடங்காப்பிடாறி என்றும் முத்திரை குத்தப்பட்டு, ஒடுக்கியுள்ளது இன்றைய சமுதாயாம். மணமுடிக்கும் ஆடவனுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டியது மணமகளின் கடமை என்றும், மனைவியை கண்டமேனிக்கு, தன் இ~;டப்படி துன்புறுத்துவது கணவனின் உரிமை என்றும் எழுதப்படாத சித்திரைவதிகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமாக உள்ளது. புரையோடிப்போன ஆதிக்க சமூகத்தில், ஆண்கள் பெண்கள் என இருபாலரும் தங்கள் அடிமைத்தனத்தை உணர முன்வராததும், உலகத்தோடு; ஒத்து ஒழுகும் வாழ்க்கை முறையை கையாளவேண்டும் என்ற கருத்தாடல்களே ஆதிக்க அவலங்களுக்கு காரணம் என நினைக்கிறேன். “நீந்த தெரியாவிட்டால் என்ன? வெள்ளம் சொல்லித்தரும் வா!” என்று கவிஞர் தாமரை கூறுவார். இவை ஆணாதிக்க அடிமைகளில் ஒடுக்கப்பட்ட பெண்களின் கை விலங்குகளை உடைத்தெறியும் சப்தமாக உளளது. என்னைப் பொறுத்தவரையில் ஆணாதிக்க சொல்லாடல்களும் அதிகார வர்க்கத்தினரும் வலுப்பெற காரணம் பெண்ணின் மௌனம்தான். அவளது சிக்கல்களும், குமுறல்களும், சிந்தனைகளும் அடி மனதில் ஆழத்தில் மௌனமாய் பனியைப்போல் உறைந்து கிடக்கின்றன. உதடுகள் பிரிந்து, உரிமைக்காக குரல் கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. மௌனம் களைவார்களா நமது வீரத்தாய்மார்கள்!!! இன்னும் அவர்களது மௌனம் தொடருமேயாயின், அவர்களது மௌனத்தை சாதகமாக்கி கொள்ளாமல் அவர்களது தயக்கத்தையும் மௌனத்தையும் கலைய அவர்களுக்காக அவர்களோடு போராடு ஆணாதிக்க வர்க்கமே!!! சத்தி ளயவாலையளனடி;பஅயடை.உழஅ (இதர) எங்கும் நிறைந்தவன் நீ எங்கே இருக்கிறாய்? அருள் சுடரே பெரும் ஜோதியே எம் அதிசய விளக்கே நீ இல்லாத இடமுண்டோ நீ காணாத மனிதம் உண்டோ. உம் பரந்த உள்ளம் இப்பாரினை ஆளுக்கின்றது. எல்லாம் உடையவனே எம் இறைவனே, உன்னை எங்கு காண்பது எளிது. ஓடி ஓடி விளையாடும் எம் சிறுவர்கள் இதயத்திலா மனித அசைவுகள் அலைமோதும் இந்த புண்ணிய பூமியிலா இசைகள் அசைந்தாடும் இந்த இயற்;கை சொர்க்கத்திலா. நீ எங்கு தென்படுகிறாய் எங்கே குடிக்கொண்டிருக்கிறாய். அநீதிகள் அலைமோதும் இந்த அன்னிய பூமியிலா அசையாமல் அதிர்ச்சி தரும் பிணியாளன் துன்பத்திலா. எங்கே என் இறைவன்-இங்கு கொள்ளையன் குத்தாட்டம் போடுகிறான் நயவஞ்சகன் நிமிர்ந்து நடக்கிறான் ஏமாற்றுகிறவன் ஏறிமிதிக்கிறான் உண்மை இல்லாதவன் உயர்ந்துள்ளான் ஆனால் தினக்கூலியோ திண்டாடுகிறான் பசியுள்ளவனோ பாத்திரம் ஏந்துகிறான் ஏழையோ ஏமாந்து போகிறான் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு இந்த புண்ணிய பூமியி;ல் மட்டும் அருள் சுடரே என் அதிசயவிளக்கே. அருள் ஆனந்த் யசரடயயெனெ;பஅயடை.உழஅ கருணையற்ற கடவுளின் இதயம் ஆதியிலே வார்த்தைகள் அசைந்தாடின அம்சமான அர்த்தங்களுடன் அப்படி இருப்பினும் ஆதவனை அசைக்கமுடியாமலும் கண்ணீரால் கரைக்க முடியாததாய் இருக்கிறது கடவுளின் இதயம் பசியால் வாடும் குழந்தைக்குப் பசிக்கு பாசத்தின் பால் பால் சுரக்காத ஆதங்கத்தில் கோபத்தில் குழந்தை கடிக்க முலைகளில் கசிகிறது இரத்தம் கனிந்த மானுடம், காவியத்தில் (உலகத்தில்) திருடனாகவும், வேசியாகவும் வாழ்வை இழந்து தவிப்பது ஆதவனின் தீர்ப்பாகிறது ஓ ஆதவனே! உலகை உருவாக்கிய உன்னதமே உதயத்தின் உருபொருளே! கண்ணிரால் கரைக்க முடியாததாய் இருக்கிறது உன் இதயம் இறுகி கிடக்கிறது பாறையாய் காத்திருக்கிறேன் தாகத்தோடு – உன் கருணைக்காக இக் காவியத்தில்! லூர்து ராஜ் டழரசனரளனடி;சழஉமநவஅயடை.உழஅ இருக்கிறார்(ஆம்) இறைவன் காற்றில் கலந்து கற்பனைக்கெட்டா ஊற்றாய் வழிந்தும் உணர்வில் அடங்கா நிதம் தேடும் நெஞ்சத்து காணா காட்சியாய் ஆழ்ந்த மனதில் ஆளும் ஆற்றலாய் இணையில்லா இன்பமாய் இருக்கின்றாராம் இறைவன்! செழிப்பில்லா களிமண்ணில் உருவாகும் பாண்டமாய் வளமான செம்மண்ணிலும் உயிர்களின் உரமாய் கலையிழந்த கரிசல் மண்ணிலும் உயிர்காக்கும் உணவுப் பொருளாய் உலகில் உலாவிக்கொண்டு இருக்கின்றாராம் இறைவன்! வஞ்சம் கொண்ட நெஞ்சத்திலும் பஞ்சத்தில் கிடைக்கும் தஞ்சத்திலும் சஞ்சலத்தின் நேரத்தில் பஞ்சணையாயும் பிஞ்சுக்குழந்தையின் கொஞ்சும் மொழியிலும் நிலைகொண்டு நிஜமாய் இருக்கின்றாராம் இறைவன்! உருவில்லா அவன் உருவாக்கிய இவன் உள்ளத்தில் உயிராகவும், உணர்வாகவும் இணையில்லா அவன் இயங்கும் இயற்கையும் உதயமாய், இதயமாய் முடிவில்லா அவன் இருமுனையில்லா பிரபஞ்சத்தின் முழுமையாய் முதன்மையாய் இருக்கின்றாராம் இறைவன்! இவை அனைத்திலும் இறையவனை உணராதவனுக்கும் அறியாதவனுக்கும் இருக்கின்றாராம் இறைவன்! உணர்ந்தவனுக்கும் அறிந்தவனுக்கும் இருக்கின்றார் ஆம் இறைவன்! அகஸ்டின் யவெ.யரபர;பஅயடை.உழஅ உண்மையான நட்பா? சோலையூர் என்னும் கிராமத்தில் மூன்று நெருங்கிய நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள் இவர்களைப் பார்த்து அந்த ஊரே பெருமைப் பட்டது. ஒரு நாள் மூவரும் ஒரு காட்டு வழியாக நடந்து சென்றார்கள்... அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது அவர்களின் கண்களிலே ஒரு இனிய (கேக் பாக்ஸ்) அகப்பட்டது அதை மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டார்கள். அதை திறந்து பார்த்த பொழுது அதில் ஒரு சிறிய கேக் இருந்தது. உடனே மூன்று பேரும் அதை பங்கு போட்டுக் கொள்ள ஆசைப் பட்டார்கள். ஆனால் அதில் இருப்பதோ ஒரு சிறிய கேக் அதனால் அந்த மூன்று நண்பர்களில் ஒருவர் சொன்னார். நாம் நமக்குள்ளே ஒரு போட்டி வைப்போம். அந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறர்;களோ அவரே இந்த கேக்கை முழுமையாக உண்ணலாம். மூன்று நண்பர்களும் அந்த போட்டிக்கு ஒத்துக் கொண்டார்கள். அந்த போட்டி என்ன வென்றால். இந்த கேக்கை நாம் ஒரு இடத்திலே வைத்துவிட்டு, நாம் தூங்க வேண்டும். அவ்வாறு தூங்கின்ற போது நாம் கனவு காண வேண்டும். அந்த கனவிலே யார் அதிக தொலைவு செல்கிறாரே அவரே இந்த கேக்கை முழுமையாக சாப்பிடலாம். மூன்று நண்பாகளும் போட்டிக்கு ஒத்துக் கொண்டு தூங்க சென்றார்கள். மூவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒருவர் எழுந்து யாருக்கும் தெரியாமல் அந்த கேக்கை சாப்பிட்டு விட்டு எதுவும் தெரியாதது போல் அவர்களோடு சென்று படுத்துக் கொண்டார். விடிந்தது, மூவன்றாவது நாபர் (கேக்கை சாப்பிட்டுவிட்டார்) ஒவ்வொருவரிடமும் கனவைப்பற்றி கேட்க தொடங்கினார். முதல் நபரிடம் கேட்டார். கனவிலே எவ்வளவு தூரம் சென்றாய் அதற்கு அவன் நான் அமெரிக்கா வரை சென்றேன் என்றான். உடனே இரண்டாவது நாபரிடம் கேட்க அவன் நான் கனவிலே ஜப்பான் வரை சென்றேன் என்றான். பிறகு அங்கு சிறிது மௌனம் நிலவியது. உடனே இந்த இரண்டு நண்பர்களும் சேர்ந்து மூன்றாவது நபரிடம் கேட்டார்கள். நீ கனவிலே எங்கு சென்றாய் என்று கேட்டார்கள். உடனே மூன்றாவது நபர், முதல் நண்பனையும் இரண்டாம் நண்பனையும் பார்த்து. நீ கனவில அமெரிக்கா சென்றாய் நீ _ப்பான் சென்றாய் நீங்கள் இரண்டு பேரும் திரும்பி வரமாட்டிரீகள் என்று நினைத்து அந்த கேக்கை நானே சாப்பிட்டு விட்டேன்...... பிரவின்